யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது குறித்து எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டே மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும் தற்போது வரை மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்ய அனுமதித்துள்ளன.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இனி மேல் மதுபானங்களை செயலி மூலம் வீட்டிற்கே door delivery செய்யும் முறையை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து தேடி பார்த்தோம். அப்போது Financial Express ஊடகப்பக்கத்தில் ”Zomato, Swiggy, BigBasket & Blinkit to launch liquor home delivery?” என்ற தலைப்பில் ஜூலை 16, 2024 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் டெல்லி, கோவா, ஹரியானா, கேரளா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் Zomato, BigBasket மற்றும் Swiggy போன்ற ஆன்லைன் உணவு விநியோக தளங்கள் மூலம் மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்வதற்கான வழித்தடத்தை ஆராய்ந்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. மேலும் இந்த திட்டத்தின் பல அம்சங்கள் குறித்து ஸ்பிரிட் தயாரிப்பாளர்கள் மற்றும் உணவு விநியோகம் செய்யும் பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது தற்போது வரை மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்ய அனுமதித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடுகையில், செப்டம்பர் 8, 2021 அன்று The Hindu ஊடகத்தில், ”No plan to introduce online liquor sale: govt” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஆன்லைனில் மதுபான விற்பனையை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து தினமலர் ஊடகப்படத்தில், ஜூலை 17, 2024 அன்று ” வீடு தேடி வரும் மதுபானங்கள்: ஸ்விக்கி - சொமேட்டோ திட்டம்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் தமிழகத்தில், மது வகைகள், 'டோர் டெலிவரி' செய்யப்படாது என்றும், எந்த புதிய திட்டமும் தங்களிடம் இல்லை என 'டாஸ்மாக்' நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, தனியார் செயலி மூலம் தமிழ்நாட்டில் மது விற்பனை எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை. இது குறித்து எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டே மறுப்பு தெரிவித்திருந்தது.
