YouTurn

'ரயில் நிலையத்தில் இளைஞரை தாக்கும் தமிழ்நாடு போலீஸ்' எனப் பரவும் தவறான செய்தி!

'ரயில் நிலையத்தில் இளைஞரை தாக்கும் தமிழ்நாடு போலீஸ்' எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோவில் இளைஞரை கடுமையாக தாக்குவது தமிழ்நாடு போலீஸ் என்று தவறாகப் பரப்பப்படுகிறது. இரயில் நிலையத்தில் போதையில் அலம்பல் செய்த இளைஞர் ஒருவரை இரயில்வே பாதுகாப்பு படை (RPF) வீரர் ஒருவர் பிடித்து கொடூரமாக தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

ஸ்டாலின் முதல்வராக இருக்கும் வரை உடன்பிறப்புகள் யாரும் காவல் துறையை கண்டு கடுகு அளவு அஞ்ச மாட்டார்கள். 



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு காவலர் ஒருவருடன் பரபரப்பு சம்பவம் என்பது போன்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் காவலர் ஒருவர் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்குவதை தெளிவாகக் காண முடிகிறது.


#DMKDestroyedTN https://t.co/ZfAfP9iVD1

— Rumesh (@rumesh4chat) February 17, 2026


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 16, 2026 அன்று நடைபெற்ற சம்பவம் என்பதை அறிய முடிந்தது. 


Thanthi TV” யூடியூப் பக்கத்தில், பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகளைக் கொண்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், இரயில் நிலையத்தில் போதையில் அலம்பல் செய்த இளைஞர் ஒருவரை இரயில்வே பாதுகாப்பு படை (RPF) வீரர் ஒருவர் பிடித்து கொடூரமாக தாக்கியதாகக் கூறி குறிப்பிட்டிருந்தனர். 



இதே போன்று, “Polimer News“ யூடியூப் பக்கத்திலும் பிப்ரவரி 16, 2026 அன்று  “இளைஞனை கீழே தள்ளி பளார் விட்ட RPF வீரர்.. அதிர்ச்சி வீடியோ“ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர். 



இதன் மூலம் இந்த வீடியோவில் அந்த இளைஞரை கடுமையாக தாக்குவது தமிழ்நாடு போலீஸ் அல்ல, இரயில்வே பாதுகாப்பு படை (RPF) வீரர் என்பது தெளிவாகிறது. மேலும் இரயில்வே பாதுகாப்பு படை (RPF) என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாகும். 



முடிவு: 


நம் தேடலில், ரயில் நிலையத்தில் இளைஞரை கடுமையாக தாக்கும் தமிழ்நாடு போலீஸ் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க