YouTurn

தடுப்பூசி செலுத்தாமல் ஏமாற்றி வெளியே விற்பதாக பரவும் வீடியோக்கள்| உண்மை என்ன ?

தடுப்பூசி செலுத்தாமல் ஏமாற்றி வெளியே விற்பதாக பரவும் வீடியோக்கள்| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

கவனம்.. தடுப்பூசி முகாம்களில் ஊசி போடுவது போல ஊசியை உடலுக்குள் சொருகி, சிரிஞ்சை அழுத்தாமல் மருந்தை மீண்டும் பாட்டிலுக்குள் ஊற்றி வெளியே விற்கும் அவலமும் அரங்கேறத்தொடங்கி விட்டது.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

தடுப்பூசி முகாம்களில் ஊசி போடுவது போன்று ஊசியை சொருகி விட்டு சிரிஞ்சை அழுத்தாமல் மருந்தை மீண்டும் பாட்டிலுக்குள் ஊற்றி வெளியே விற்கும் அவலம் அரங்கேறுவதாகக் கூறி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





வீடியோக்களில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராக இருக்கும் நபரின் கையில் ஊசியை குத்தி விட்டு மருந்தை செலுத்தாமல் அப்படியே வெளியே எடுக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா, இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

முதல் வீடியோ :

இவ்வீடியோ குறித்து தேடுகையில், " சரியாக தடுப்பூசி செலுத்தாத செவிலியர் குறித்து விசாரணையை நடத்த சுகாதார அமைச்சர் கேமிலோ சலினாஸ் அறிவித்தார். செவிலியர் அடையாளம் காணப்பட்டுள்ளார் " என ஏப்ரல் 26-ம் தேதி Ecuavisa எனும் ட்விட்டர் பக்கத்தில் அதே வீடியோ வெளியாகி இருக்கிறது.



Twitter link

இந்த சம்பவம் நிகழ்ந்தது இந்தியா அல்ல. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குயாகுவில் நிகழ்ந்ததாக சில ஊடக செய்திகளின் அறிக்கையும் உள்ளன.

cnnespanol செய்தியில், ஈக்வடார் அதிபரின் அமைச்சரவையின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் வாட் கூறுகையில், 55 வயதான அந்த நபர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் வரிசையில் சென்று மோசடி செய்துள்ளார். வீடியோவில் காண்பிக்கப்பட்டபடி, செவிலியர் முதலில் அவருக்கு தடுப்பூசி போடவில்லை. ஆனால், பின்னர் அவருக்கு டோஸ் கொடுக்கப்பட்டது. அவர்கள் இருவருமே விசாரணையில் உள்ளனர் " எனக் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது வீடியோ : 



இவ்வீடியோ குறித்து தேடுகையில், மெக்சிகோ நாட்டின் செய்தித்தாளான El Universal உடைய அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் 2021 ஏப்ரல் 4-ம் தேதி இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.

2021 ஏப்ரல் 3-ம் தேதி மெக்சிகவின் தேசிய பாலிடெக்னிக் நிறுவனத்தில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் பள்ளியில் ஒரு முதியவருக்கு செவிலியர் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் போது மருந்தை செலுத்தாமல் ஊசியை எடுத்த சம்பவம் அந்த நபரின் உறவினரால் வெளியே தெரிய வந்துள்ளது.



Twitter link 

ஏப்ரல் 4-ம் தேதி மெக்சிகன் இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் செக்யூரிட்டி(IMSS) தன் ட்விட்டர் பக்கத்தில் சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்து உள்ளது. அந்த செவிலியர் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் மற்றும் மன்னிப்பு கோரவும் செய்துள்ளது.

முடிவு :

நம் தேடலில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின் போது ஊசியை குத்தி விட்டு மருந்தை செலுத்தாமல் வெளியே எடுக்கும் காட்சிகள் கொண்ட வீடியோக்கள் இந்தியாவில் நிகழ்ந்தவை அல்ல.

செவிலியர்களின் அலட்சியம் மற்றும் கவனக் குறைவால் இதுபோன்ற தவறான சம்பவங்கள் சில நாடுகளில் நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், தடுப்பூசியை செலுத்தாமல் ஏமாற்றி வெளியே விற்பதாக கூறுவது எல்லாம் இணைக்கப்பட்ட கதை என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க