YouTurn

'இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு' எனப் பரவும் போலி செய்தி!

'இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு' எனப் பரவும் போலி செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் கடந்த மே 7-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானில் 4 இடங்களிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், 'இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது' என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


மேலும் பரவி வரும் புகைப்படத்தில், "பாகிஸ்தான் அரசின் ரகசிய மற்றும் அவசர வெளீயீடு" என்று குறிப்பிட்டிருப்பதையும் காண முடிகிறது. 


#radiation #nuclear #DGMO #ceasefire #ceasefirevoilation #riyadh pic.twitter.com/aOEAXrMk7Q

— Ankit Verma 4.0 (@ankitve7119116) May 13, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களையும் பாகிஸ்தான் அரசு வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது. 


மேலும் ஆய்வு செய்ததில், "பாகிஸ்தான் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் (PNRA)" அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டிருப்பது குறித்து எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.



மேலும், பரவி வரும் புகைப்படத்தில் பாகிஸ்தான் அரசின் மின்னஞ்சல் முகவரி “@env.go.v.pk” என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு வரியிலும் கீழே குறிப்பிட்டிருப்பது போன்று பல எழுத்துப்பிழைகள் உள்ளதையும் தெளிவாகக் காண முடிகிறது.



இதன் மூலம் இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கூறி பரவி வரும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது. 


முடிவு:


நம் தேடலில், இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் போலியானவை என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க