யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த காவல்துறை உதவி எண் மும்பை நகரத்தில் மட்டுமே பெண்கள் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்டது. ஆனால் 2017 ஆண்டிலே அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த ஜூன் 9ஆம் தேதி தமிழ்நாடு அரசு பெண்கள் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற தனிப்பிரிவை தொடங்கியது. இந்நிலையில், ’ஆட்டோ, கார் போன்ற வாடகை வாகனங்களில் பெண்கள் தனியாக பயணிக்கும் போது, இந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்ட காவல்துறை உதவி எண்ணிற்கு தெரியப்படுத்துமாறும், இதனைக் கொண்டு அந்த வாகனத்தை போலீஸார் GPRS மூலம் கண்காணிப்பார்கள்’ என்றும் கூறி தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இவ்வாறு ஒரு உதவி எண் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு காவல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளதா என்று தேடினோம். ஆனால் இது குறித்த செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதிலிருந்து, காவல்துறை இது போன்றதொரு அறிவிப்பை வெளியிடவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
#PIBFactCheck
Claim: Women travelling alone at night in auto or taxi can SMS the vehicle’s no. to the Police (9969777888) & their vehicle will be traced through GPRS.
Reality: This was a Mumbai specific service only and has been discontinued since 2017
Conclusion: #FakeNews pic.twitter.com/AsxvggEvsU
மேலும் தேடிய போது, ’Press Information Bureau (PIB)’ 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ’ஆட்டோ அல்லது டாக்ஸியில் தனியாக பயணிக்கும் பெண்கள் அந்த வாகனத்தின் எண்ணை குறிப்பிட்ட எண்ணிற்கு தெரியப்படுத்துவது, அதன் மூலம் அந்த வாகனத்தை GPRS மூலம் போலீஸ் கண்காணிக்கும் என்ற திட்டம் மும்பை நகரத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. மேலும், இந்த திட்டம் 2017ஆம் ஆண்டிலே நிறுத்தப்பட்டுவிட்டது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Fake message is floating on Whatsapp regarding this number as BCP’s Women Helpline. The number does not belong to BCP People are requested not to believe or share this fake message. Stringent action will be taken against those who create and spread fake messages on social media pic.twitter.com/nDedjqa0RG
அதேபோல், பெங்களூரு மாநகர போலீஸ், ஹைதராபாத் மாநகர போலீஸ் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே இந்த திட்டம் குறித்து பரப்பப்படும் தகவல் பொய்யானது என்றும் இதனை சமூக வலைத்தளத்தில் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
#FakeNews Circulating on #SocialMedia Regarding #Telangana Police Introduced a New Mobile Tracking Number (9969777888) While Travelling in Cabs & Autos it is is Fake News Don't Circulate it. pic.twitter.com/tPkqzuR1eX
மேற்கூறிய விவரங்களிலிருந்து, ’தனியாக பயணம் செய்யும் பெண்கள் தங்கள் பயணம் செய்யும் ஆட்டோ அல்லது டாக்ஸின் வாகன எண்ணை குறிப்பிட்ட காவல்துறை உதவி எண்ணிற்கு தெரிவிக்கும் திட்டம் மும்பை நகரத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது; ஆனால் 2017 ஆண்டிலே அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது அது செயல்ப்பாட்டில் இல்லை’ என்பது தெரிய வருகிறது.
முடிவு:
ஆட்டோ அல்லது டாக்ஸில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு தற்போது காவல்துறை உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. இதுவொரு வதந்தி மட்டுமே, தமிழ்நாடு காவல்துறை இவ்வாறான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

