YouTurn

சரவணா ஸ்டோர்ஸின் பரிசுத் திட்டம் என்று பரவும் போலியான செய்தி!

சரவணா ஸ்டோர்ஸின் பரிசுத் திட்டம் என்று பரவும் போலியான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

மோசடி

சரிபார்க்கப்பட்ட கூற்று

சரவணா ஸ்டோர்ஸ் இது குறித்து எந்த பரிசு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது போன்ற போலியான பக்கங்களை உருவாக்கி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்” என்று கூறி சரவணா ஸ்டோர்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

பரவிய செய்தி

Saravana Stores அரசின் வணிக உதவி

பரிசுகள்

கேள்வித்தாள் மூலம், நீங்கள் ₹50,000 பெற வாய்ப்பு கிடைக்கும்.

https://arava.wtsuy.xyz/46ljpnll/1af3e04f3ab050d0c1ad47c1b1?_t=1762777048238&p=w 

விரிவான விளக்கம்

சரவணா ஸ்டோர்ஸின் பரிசுத் திட்டம் என்று கூறி சமூக வலைதளங்களில் arava.wtsuy.xyz என்ற லிங்க் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த லிங்கில் உள்ள கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால் ரூ.50,000 பரிசு கிடைக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ய, உண்மையில் Saravana Stores பரிசு திட்டம் அறிவித்துள்ளதா என்பது குறித்து தேடியதில், இது குறித்த எந்த அறிவிப்புகளும் இல்லை.


மேலும் பரவி வரும் இணையதள முகவரியை கணினி மூலம் கிளிக் செய்த போது , arava.wtsuy.xyz க்கான அணுகல் மறுக்கப்பட்டது என்று பதில் கிடைத்தது. 

ஆனால் மொபைலில் கிளிக் செய்து பார்த்த போது, 4 கேள்விகள் கேட்கப்படுகிறது.


அதற்கு பதலளித்த பின்பு, பதில்கள் வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது என்றும், கேள்வித்தாள் மூலம் ரூ.50,000 பெற வாய்ப்பு கிடைக்கும் என்றும், பரிசு இருக்கும் சரியான பெட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


பெட்டியை தேர்ந்தெடுத்த பிறகு, அடுத்த பக்கத்தில் ரூ.50,000 ஜெயிச்சிட்டீங்க, முகவரி பதிவை முடித்த உடன், 5-7 நாட்களுக்கு பணம் டெலிவரி செய்யப்படும் என்றிருந்தது. 


அதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்ற போது, Whatsapp, Messenger, Telegram ஆகிய செயலிகளில் உள்ள 5 குழுக்கள்/ 20 நண்பர்களுடன் இதை பகிர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 


இது குறித்து மேலும் தேடிய போது, சரவணா ஸ்டோர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் "சரவணா ஸ்டோர்ஸ் பெயரில் போலியான பக்கங்கள் பரிசு திட்டம் என கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. இவை எங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவை.நாங்கள் ஒருபோதும் பதிவு செய்ய அல்லது சந்தேகமான லிங்க் கிளிக் செய்ய கூறமாட்டோம்" என்று தெரிவித்திருந்தனர். 


இது போன்ற மோசடிகளில் பொதுமக்கள் பணத்தை இழந்திருந்தால், "1930" என்ற "சைபர் கிரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்" மூலமாகவோ, www.cybercrime.gov.in இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற போலியான ஃபிஷிங் இணையதளங்களை தவிர்ப்பதும் நல்லது.


முடிவு: 

எனவே, சரவணா ஸ்டோர்ஸின் பரிசுத் திட்டம் எனப் பரவும் இணையதளப் பக்கம் போலியானது. இது குறித்து எந்த பரிசு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது போன்ற போலியான பக்கங்களை உருவாக்கி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்று கூறி சரவணா ஸ்டோர்ஸ் விளக்கம் அளித்துள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க