YouTurn

விசாரணை கைதிகள் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

விசாரணை கைதிகள் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“விசாரணை கைதிகள் விசாரணையின் போது, பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகக் கூறி பரவி வரும் இந்த நியூஸ் கார்டு போலியானது. இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை.

பரவிய செய்தி

"அரசியல் செய்யாதீர்"; விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது! இதை வைத்து மலிவான அரசியல் செய்வது வெட்க கேடானது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


X Link | Archive Link

விரிவான விளக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக வேலை செய்த அஜித் குமார் (வயது 27), நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல்துறையினர் நடத்திய தாக்கியதில் தான் உயிரிழந்தாக சொல்லப்படுகிறது. 


இந்நிலையில், “விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது. இதை வைத்து மலிவான அரசியல் செய்வது வெட்க கேடானது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகக் கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 


#SayYesToWomenSafety&AIADMK (@IndiraniSudala1) June 30, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து நியூஸ்7 தமிழ் ஏதேனும் செய்தி வெளியிட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். ஆனால் “விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது. 


மேலும் “பரவி வரும் இந்த நியூஸ் கார்டு போலியானது. இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டு  நியூஸ்7 தமிழ் தனது எக்ஸ் பக்கத்தில் ஜூன் 29 அன்று பதிவு செய்துள்ளதையும் தெளிவாகக் காண முடிகிறது. 


#Fake | #FakeNews | #FactCheck pic.twitter.com/8zAmM0FoWh

— News7 Tamil (@news7tamil) June 29, 2025


இந்நிலையில் போலியான நியூஸ் கார்டை பலரும் தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், “விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க