YouTurn

இது செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப் பருப்பு அல்ல| உண்மை என்ன ?

இது செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப் பருப்பு அல்ல| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப்பருப்பு! இது ஒரு எச்சரிக்கை பதிவு!



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

இயந்திரத்தில் முந்திரிப்பருப்பு அச்சினைப் போன்று உருவாக்கப்பட்டு தனியாக எடுக்கப்படும் உணவு பொருள் ஒன்றின் வீடியோ காட்சிக்கு பின்னால் ஒருவர் பிற மொழியில் பேசுவது இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோவை தமிழில் செயற்கையாக முந்திரிப்பருப்பு உருவாக்குவதாகக் கூறி பகிர்ந்ததால் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.



Facebook link | archive link 

உண்மை என்ன ? 

இயந்திரங்களில் முந்திரிப்பருப்பு வடிவில் தயாரிக்கப்படும் பொருள் என்னவென்று அறிய கீ வார்த்தைகளைக் கொண்டு தேடிய போது அது முந்திரிப் பருப்பு வடிவில் தயாரிக்கப்படும் உணவு பொருள்(நொறுக்குத்தீனி) என அறிய முடிந்தது. வைரலாகும் வீடியோவைப் போன்று சில வீடியோக்கள் யூடியூப் தளத்தில் வெளியாகி இருக்கிறது.



இவை முந்திரி வடிவில் இருக்கும் பிஸ்கெட்களே. சிறிய அளவில் இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். உண்பதற்கு முன்பு அவற்றை வறுக்க வேண்டும். போலியான முந்திரிப் பருப்பாக இருந்தாலும் நிறம், அளவும், சுவை ஆகியவற்றினை உங்களால் உணர முடியும். முந்திரி வடிவிலான பிஸ்கெட்டைத் தயாரிக்கும் வீடியோவை இந்திய அளவில் தவறாக பரப்பி வருகின்றனர்.



Twitter link | archive link

மேலும் படிக்க : போலியான பால் தயாரிப்பதாக பரவும் வீடியோ | உண்மை என்ன ?

இதற்கு முன்பாகவும், செயற்கையான முறையில் பால் தயாரிப்பதாக தவறான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. தற்போது வைரலாகும் வீடியோவில், தயாரிக்கப்படும் பொருளின் சுகாதாரம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தால் உகந்ததாக இருந்து இருக்கும். ஆனால், போலியான முந்திரிப் பருப்பு என தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப்பருப்பு என எச்சரிக்கை செய்து பரப்பப்படும் வீடியோவில் தயாரிக்கப்படுவது முந்திரி வடிவிலான பிஸ்கெட் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க