YouTurn

திமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி !

திமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

EVM இயந்திரம் என நினைத்து தொழிலாளியை தாக்கி துளையிடும் கருவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து முற்றுகையிட்ட சேலம் மாவட்ட திமுக கூட்டணி கட்சியினர் !



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழக தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்த பிறகு இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் பகுதியை ராணுவம், காவல்துறை பாதுகாப்பை தாண்டி கட்சியினரும் பாதுகாக்க வேண்டிய கடமை இருப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரத்தை திருடியதாக நினைத்து டூல்பாக்ஸை கொண்டு சென்றவர்களை திமுகவினர் பிடித்ததாக கிண்டல் பதிவுகள், ட்ரோல் மீம்கள் ஏராளமாய் வெளியாகின.



இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரம் என நினைத்து தொழிலாளியை தாக்கி துளையிடும் கருவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து முற்றுகையிட்ட சேலம் மாவட்ட திமுக கூட்டணி கட்சியினர் என பாலிமர் செய்தியில் வெளியாகியதாக ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

இவிஎம் இயந்திரம் என நினைத்து துளையிடும் டூல்பாக்ஸை திமுக கூட்டணியினர் போலீசில் ஒப்படைத்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. பாலிமர் செய்தியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு என பரவும் ஸ்க்ரீன்ஷார்ட் கூட எடிட் செய்யப்பட்டதே.



பாலிமர் செய்தியில் இடம்பெற்ற புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2021 மார்ச் 28-ம் தேதி செய்யாறு போலீசார் கூலித் தொழிலாளியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுகவினர் செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் " என தினமணி செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

திமுகவை ட்ரோல் செய்வதற்காக இச்செய்தியை எடிட் செய்து இருக்கலாம். ஆனால், இது உண்மையான செய்தி என நினைத்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.

முடிவு : 

நம் தேடலில், வாக்குப் பதிவு இயந்திரம் என நினைத்து தொழிலாளியை தாக்கி துளையிடும் கருவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து முற்றுகையிட்ட சேலம் மாவட்ட திமுக கூட்டணி கட்சியினர் எனப் பரப்பப்படும் பாலிமர் செய்தி போலியான எடிட் செய்யப்பட்ட செய்தி என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க