YouTurn

இலந்தைப் பழ மரத்தின் வயது 2,000 ஆண்டுகள் என அமர் பிரசாத் பதிவிட்ட பொய் தகவல் !

இலந்தைப் பழ மரத்தின் வயது 2,000 ஆண்டுகள் என அமர் பிரசாத் பதிவிட்ட பொய் தகவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

எனக்கு பின்னால் இருக்கும் இலந்தை பழம் மரம் 2000 ஆண்டுகள் பழமையானது. இது ராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோவிலில் அமைந்துள்ளது.

elantha pazham tree life

Archive link 

விரிவான விளக்கம்

மிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், " எனக்கு பின்னால் இருக்கும் இலந்தைப் பழம் மரம் 2000 ஆண்டுகள் பழமையானது. இது ராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோவிலில் அமைந்துள்ளது " எனக் கூறி தன்னுடைய புகைப்படத்தை பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையை டக் செய்து பதிவிட்டு இருக்கிறார்.



Facebook link 



அமர் பிரசாத் பதிவிட்ட படம் மற்றும் இலந்தைப் பழம் குறித்த தகவலை பாஜகவைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ? 

அமர் பிரசாத் கூறியதுபடி இலந்தைப் பழ மரமானது 2000 ஆண்டுகள் வரை வாழக்கூடியதா எனத் தேடுகையில், " பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலில் உள்ள இலந்தைப் பழ மரம் (Ber or Jujube Tree) 440 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. இலந்தை மரம் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடியது என அறிவோம். ஆனால், இந்த மரங்கள் பதிவு செய்யப்பட்ட ஆயுட்காலத்தை விட நான்கு மடங்கு அதிகமாக வாழ்ந்துள்ளன "  என 2013ம் ஆண்டு ஜே.எஸ் பால் மற்றும் டி.ஆர். சர்மா, பி.சிங் ஆகியோர் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

elanthai pazham amar prasad

இதுகுறித்து வேளாண் ஆராய்ச்சியாளர் ஜி.கே தினேஷ் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுகையில், " இலந்தை மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. சில மரங்கள் 500 ஆண்டுகள் வரை கூட வளரக்கூடியவை " எனத் தெரிவித்து இருந்தார்.



உலகின் பழமையான உயிர் வாழும் மரமாக bristlecone pines கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது. அதன் வயது 4,800 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், இராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள இலந்தைப் பழ மரம் 2000 ஆண்டுகள் பழமையானது என பாஜகவின் அமர் பிரசாத் பதிவிட்டது தவறான தகவல். இலந்தை பழ மரங்கள் 100 ஆண்டுகள் வாழக்கூடியது. சில மரங்கள் அதிகபட்சமாக சுமார் 500 ஆண்டுகள் வரை வாழக்கூடியது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க