YouTurn

கொடநாடு கொலை வழக்கை நிறுத்தினால் நீட் மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக பழனிசாமி கூறினாரா ?

கொடநாடு கொலை வழக்கை நிறுத்தினால் நீட் மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக பழனிசாமி கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவளிக்கத் தயார் - சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி



Twitter link | Archive link 



Facebook link 

விரிவான விளக்கம்

செப்டம்பர் 13-ம் தேதி நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கிடையில், திமுகவின் நீட் விலக்கு மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்றால் கொடநாடு கொலை வழக்கின் விசாரணையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக புதியதலைமுறை மற்றும் சன் நியூஸ் உடைய நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



உண்மை என்ன ?

கொடநாடு வழக்கு மறுவிசாரணையை நிறுத்தினால் மட்டுமே நீட் விலக்கு மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறவில்லை. வைரல் செய்யப்படும் இரு நியூஸ் கார்டுகளுமே எடிட் செய்யப்பட்டது.

செப்டம்பர் 13-ம் தேதி புதியதலைமுறை செய்தியில், " நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை அதிமுக ஆதரிக்கும் - சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி " என்ற நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.



Facebook link  

சன் நியூஸ் தமிழ் செய்தியில், " நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில் அதிமுக வெளிநடப்பு ! " என்றே நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.



Facebook link 

சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு கோரும் சட்ட மசோதாவை அதிமுக ஆதரித்து இருப்பதாகவும், பாஜக வெளிநடப்பு செய்ததாகவும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.



முடிவு : 

நம் தேடலில், கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவளிக்கத் தயார் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரப்பப்படும் புதியதலைமுறை மற்றும் சன் நியூஸ் சேனல்களின் நியூஸ் கார்டுகள் போலியானவை என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க