YouTurn

எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ குனிந்து வணங்குவதாக பரவும் தவறான புகைப்படம் !

எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ குனிந்து வணங்குவதாக பரவும் தவறான புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக கட்சியிலும், தமிழக முதல்வர் பதவிலும் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக நீடித்து வரும் நிலையில் அவரும், அமைச்சர் ஜெயக்குமாரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்பாக குனிந்து...

பரவிய செய்தி

வாழ்க்கையும் பதவியும் நிலையானது அல்ல என்பதை இந்த படத்தை பார்த்து உணர்வோம்



Facebook link | archive link 1 | archive post 2

விரிவான விளக்கம்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக கட்சியிலும், தமிழக முதல்வர் பதவிலும் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக நீடித்து வரும் நிலையில் அவரும், அமைச்சர் ஜெயக்குமாரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்பாக குனிந்து வணங்கும் பழைய புகைப்படம் என மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில் " Getty image " என புகைப்பட தளத்தின் பாதி பெயர் இருப்பதை காணலாம். புகைப்படத்தை கட் செய்து பகிர்ந்து உள்ளார்கள் என புரிந்து கொள்ள முடிகிறது. ஆகையால், அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2016 டிசம்பர் மாதம் " ஜெயாவின் ஆட்சிக்காலம் பெண்களின் பொற்காலமா? " என பிபிசி தமிழில் வெளியான கட்டுரையில் முழுமையான புகைப்படம் இடம்பெற்று உள்ளது.



ஓபிஎஸ் அருகில் அமர்ந்து இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் வணங்கும் புகைப்படத்தில் ஜெயலலிதா பகுதியை நீக்கி விட்டு பகிர்ந்து வருகிறார்கள்.

முடிவு : 

நமது தேடலில், எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் ஆகியோர் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களை குனிந்து வணங்குவதாக பகிரப்படும் புகைப்படம் தவறானது. அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வணங்குகிறார்கள் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க