YouTurn

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குடிபோதையில் கார் ஓட்டி கைதாகியது போல் தவறாக சித்தரிக்கும் செய்தி !

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குடிபோதையில் கார் ஓட்டி கைதாகியது போல் தவறாக சித்தரிக்கும் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

குஜராத்தில் ராகுல்காந்தி கைது ! குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற போது கையும்களவுமாக பிடிபட்ட ராகுல் காந்தி .



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

கதிர் நியூஸ் உடைய ட்விட்டர் பக்கத்தில், " குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற போது கையும் களவுமாக பிடிபட்ட ராகுல் காந்தி " என கார்  புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.





இந்த பதிவை பார்த்தவர்கள் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி என நினைத்து கொண்டு கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், இந்த நியூஸ் கார்டை சமூக வலைதளங்களில் பரப்பியும் வருகிறார்கள்.

உண்மை என்ன ?

குஜராத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது தொடர்பாக தேடுகையில், " குஜராத் மாநிலத்தின் பானஸ் காம் எனும் பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி என்ற நபர் சூரத் காதொதரா சாலையில் காரில் குடித்து விட்டு தொல்லை கொடுத்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து விட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளதாக" ஆகஸ்ட் 24-ம் தேதி இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.



கதிர் நியூஸ் பாஜக காட்சியைச் சேர்ந்த நபரால் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் தலைப்பை வைத்து opindia எனும் இணையதளமும் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த இணையதளம் வலதுசாரி ஆதரவு செய்திகளை வெளியிடும் இணையதளம்.

குடிபோதையில் சிக்கிய " ராகுல் காந்தி என்ற நபர் கைது " என வெளிப்படையாக செய்தியை வெளியிடாமல் வைரலாக வேண்டும் என்பதற்காவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும்" ராகுல் காந்தி " என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை குறிப்பிடும் விதத்தில் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். இதையறிமால், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கைது என நினைத்து பலரும் இந்த நியூஸ் கார்டை பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற போது கையும் களவுமாக பிடிபட்ட ராகுல் காந்தி எனும் செய்தி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த ராகுல் காந்தி எனும் நபரை கைது செய்ததை தெளிவாக பதிவிடாததால் தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க