YouTurn

திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்படுவதாக 2019-ல் நிகழ்ந்த வீடியோவை பரப்பும் பாஜகவின் செளதா மணி !

திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்படுவதாக 2019-ல் நிகழ்ந்த வீடியோவை பரப்பும் பாஜகவின் செளதா மணி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விடியல் ஆட்சி! சட்டம் ஒழுங்கு காற்றில் பற பறக்குது! போலீஸுக்கே தண்ணி காட்டுது! காட்டுது! அதிகாரம் கண்ணைக் கட்டுது! ஆணவம் தலை தூக்குது! கண்டு கொள்ளத்தான் ஆள் இல்லையே…. காவலர்களுக்கே இந்த கதி என்றால் பெண்களின் நிலைமை என்ன மக்களே?



Archive link

விரிவான விளக்கம்

தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினரான செளதா மணி என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், " திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, காவலர்களுக்கே இந்த கதியா " என சாலையில் இளைஞர்கள் சிலர் காவலரை தாக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.



உண்மை என்ன ? 

பாஜகவைச் சேர்ந்த செளதா மணி பதிவிட்ட வீடியோ குறித்து தேடுகையில், அந்த வீடியோ கடந்த 2019-ம் ஆண்டு சென்னை சாலையில் மதுபோதையில் இருந்த நான்கு பேர் காவலரை தாக்கியதாக NDTV செய்தியில் வெளியாகி இருக்கிறது.



2019-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி கோடம்பாக்கம் நெடுஞ்சாலைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த கார்த்திகேயன் என்ற காவலரை மதுபோதையில் இருந்த நபர்கள் தாக்கி உள்ளனர். காவலரை தாக்கிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து உள்ளதா இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : பொய் செய்தி பரப்பிய பாஜகவினர்.. திட்டித்தீர்த்த அமைச்சர் பி.டி.ஆர் !

தமிழக பாஜகவைச் சேர்ந்த சௌதா மணி ட்விட்டர் பக்கத்தில் பலமுறை பொய்யான செய்திகள் மற்றும் தகவல்களை பகிர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு:

நம் தேடலில், திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்படுவதாக பரப்பப்படும் வீடியோ கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னையில் நிகழ்ந்த சம்பவம். அப்போதே அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க