YouTurn

ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியலில் திமுக பெயரை மாற்றியதாக குற்றஞ்சாட்டும் அதிமுக! உண்மை என்ன?

ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியலில் திமுக பெயரை மாற்றியதாக குற்றஞ்சாட்டும் அதிமுக!  உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ரெக்கையா மாலிக், ராஜாத்தி ஆகியவை கவிஞர் சல்மாவின் பெயர்கள் தான்.

பரவிய செய்தி

திமுக வேட்பாளர் பெயர் ரெக்கையா மாலிக் (எ) சல்மான்னு சொன்னாங்க இப்ப ராஜாத்தினு செய்தி குறிப்புல வருது. இதுலயும் ஊழலா... புளியஞ் சாதத்துல முட்டைய வச்சி பிரியாணினு ஏமாத்திட்டானுகளா...

 

Link / Archive Link

விரிவான விளக்கம்

கடந்த மே 28ஆம் தேதியன்று திமுக தனது ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நடிகர் மற்றும் ‘மக்கள் நீதி மய்யம்’  கட்சியின் தலைவரான கமல் ஹாசன் உட்பட மூத் வழக்கறிஞர் வில்சன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம், எழுத்தாளர் சல்மா ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

 

இந்நிலையில், ராஜ்ய சபா தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுகளில் செல்லத்தக்கவை நிராகரிக்கப்பட்டவை குறித்த அறிவிப்பை கடந்த ஜீன் 10ஆம் தேதி சட்டமன்ற பேரவை செயலகம் வெளியிட்டது. அதில் திருமதி. ராஜாத்தி என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.

 

வேட்பாளர் பட்டியலில் ரெக்கையா மாலிக் (எ) சல்மா என்று குறிப்பிட்டுவிட்டு தற்போது ராஜாத்தி என்று பெயரை மாற்றி திமுக ஊழல் செய்வதாக அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


#தில்லுமுல்லு_திமுக @AIADMKITWINGOFL pic.twitter.com/F8GXmC8lBH

— Dr.VPB.Paramasivam @official (@DrVpb) June 10, 2025


உண்மை என்ன?

 

எழுத்தாளர் சல்மா குறித்து இணையத்தில் தேடியதில், அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை பார்க்க முடிந்தது. அதில் அவர் தன்னை 'ராஜாத்தி சல்மா' என்றே குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் தேடியதில், 'The Hindu'  செய்தித்தளத்தில் கவிஞர் சல்மா குறித்து எழுதப்பட்டிருந்த கட்டுரையை காணமுடிந்தது. அதில், 'ரெக்கையா மாலிக் என்பது சல்மாவிற்கு வீட்டில் வைத்த பெயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சல்மா பிறந்து வளர்ந்த சமூகத்தில் மரபுகள் என்று சொல்லப்படுவதை மீறும் வகையில் அவரது கவிதைகள் இருந்ததால் 'ராஜாத்தி' என்ற பெயரில் எழுதத் தொடங்கினார், பின்னர் சல்மா என்று மாற்றிக்கொண்டார் என்றும்' குறிப்பிடப்பட்டுள்ளது.


 

மேலும், 'மின்னம்பலம்' தளத்தில் வெளியான கட்டுரை ஒன்று சல்மாவின் எழுத்துலக வாழ்வை பற்றி குறிப்பிடுகிறது. அதில், 'சிறுமி ராஜாத்தி எப்படி தனது எழுத்துலக பயணத்தின் வழியே கவிஞர் சல்மாவாக மாறினார்' என்று விளக்கப்பட்டுள்ளது.


 

மேற்கூறிய விவரங்களிலிருந்து, ரெக்கையா மாலிக், ராஜாத்தி ஆகிய பெயர்கள் கவிஞர் சல்மாவை குறிக்கக்கூடியவை தான் என்பது நிரூபணமாகிறது.

 

முடிவு:

 

ரெக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மாவிற்கு, ராஜாத்தி என்ற பெயரும் இருக்கிறது. இவையனைத்தும் ஒரே நபருடைய பெயர்கள் தான். இந்நிலையில், ‘சல்மா’ என்ற பெயரை ‘சல்மான்’ என்று தவறாக குறிப்பிடுவதோடு, திமுக ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியலில் ஊழல் செய்வதாக அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் தவறாக பரப்புகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க