YouTurn

அண்ணா அறிவாலயத்தில் நாட்டிலேயே உயரமான கொடி கம்பமா?

அண்ணா அறிவாலயத்தில் நாட்டிலேயே உயரமான கொடி கம்பமா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

டிசம்பர் 11-ம் தேதியன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருப்பு சிவப்பு வண்ணக் கொடியை 114 அடி உயர மின் கம்பத்தில் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். திமுக சார்பில் நிறுவப்பட்ட கட்சிக் கொடி கம்பம் 114 அடி, 2430 கிலோ எடை கொண்டது. இதில் பறக்கும் கொடியின் அகலம் 30 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்டது. கொடி இரவு...

பரவிய செய்தி

கழகத் தலைவர் ஸ்டாலின் நாட்டிலேயே மிக உயரமாக அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 114 அடி உயர கொடி கம்பத்தில் கழக இரு வண்ணக் கொடியை ஏற்றினார் - திமுக ட்விட்டர் பக்கம்.

விரிவான விளக்கம்

டிசம்பர் 11-ம் தேதியன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருப்பு சிவப்பு வண்ணக் கொடியை  114 அடி உயர மின் கம்பத்தில் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

திமுக சார்பில் நிறுவப்பட்ட கட்சிக் கொடி கம்பம் 114 அடி, 2430 கிலோ எடை கொண்டது. இதில் பறக்கும் கொடியின் அகலம் 30 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்டது. கொடி இரவு நேரத்திலும் தெரியக்கூடிய வகையில் இரண்டு ஹைபீம் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரம்மாண்டமான கட்சிக் கொடி ஏற்றிய நிகழ்வை பற்றி திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.



அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக கொடி கம்பம் நாட்டிலேயே உயரமான கொடி கம்பம் என பொருள் தரும்படி பொருந்தாத செய்தியை அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்தது தவறான ஒன்று.



இந்தியாவில் மிக அதிக உயரத்தில் பறக்கும் கொடியானது நம் நாட்டின் தேசியக் கொடி மட்டுமே. இந்தியாவில் அதிக உயரத்தில் பறக்கும் கொடியான தேசியக் கொடி கர்நாடகா மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பெலகாவி கோட்டை அருகே கோட்டே கேரேவில் மார்ச் 2018-ல் ஏற்றப்பட்டது. இதன் உயரம் 110 மீட்டர் (360.89அடி). இதற்கு அடுத்தப்படியாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரியில் 360 அடி உயரத்தில் இந்திய தேசியக் கொடி பறக்கிறது.

திமுக கட்சி பற்றி வெளியான ஊடகச் செய்திகள் சிலவற்றில் நாட்டிலேயே மிகப்பெரிய கட்சிக் கொடி எனக் குறிப்பிட்டு வெளியிட்டு உள்ளனர். அதேபோல், டிசம்பர் 12-ம் தேதி திமுக சார்பில் வெளியிட்ட அறிக்கை என ஹிந்து பத்திரிகையில் வெளியான செய்தியில் “ தமிழகத்தில் எந்தவொரு கட்சி அலுவலகத்திலும் இல்லாத 114 அடி உயரம் கொண்ட கொடி “ எனக் கூறியதாக இடம்பெற்று உள்ளது.



நாட்டில் அல்லது தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சி கொடி என வேண்டுமானால் திமுக கட்சிக் கொடியைக் கூறலாம்.

அறிக்கையைத் தவிர்த்து தமிழகத்தின் எதிர்க் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தவறான பொருள்படி கூறியது ஏற்புடையது அல்ல. இவ்வாறான பொருந்தாத தகவல் திமுக கட்சியின் ஆதரவாளர்களால் உண்மை என நினைத்து அதே தவறான செய்தி பரவலுக்கும் வழிவகை செய்யக்கூடும்.

சுருக்கமாக

அண்ணா அறிவாலயத்தில் ஏற்றப்பட்டது 114 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய அரசியல் கட்சி கொடி கம்பம் எனலாம். நாட்டிலேயே மிகப்பெரிய கொடி கம்பம் என கூறுவது தவறு. இந்தியாவில் உள்ள உயரமான தேசியக் கொடி கம்பம் 360.89 அடியாகும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.