YouTurn

இயக்குநர் மோகன் ஜி தயாரிப்பாளரிடம் ரூ.30 லட்சத்தை ஏமாற்றியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

இயக்குநர் மோகன் ஜி தயாரிப்பாளரிடம் ரூ.30 லட்சத்தை ஏமாற்றியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பணம் மரத்துலயா காய்க்குது ? ஜெ.எஸ்.கே.கோபி ஆதங்கம். இந்துத்துவாவுக்கு ஆதரவாக படம் எடுக்கிறேன் எனக்கூறி முப்பது லட்சம் வரை மோகன் ஜி என்னிடம் ஏமாற்றியுள்ளார். பணம் என்ன மரத்திலா காய்க்கிறது ? காவல்துறை தலையிட்டு எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும். இயக்குனர் மோகன் ஜி மீது ஜெ.எஸ்.கே.கோபி குற்றச்சாட்டு.


Archive link

விரிவான விளக்கம்

திரௌபதி திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தற்போது செல்வராகவனின் நடிப்பில் பகாசூரன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இந்துத்துவாவுக்கு ஆதரவாக படம் எடுக்கிறேன் எனக்கூறி முப்பது லட்சம் வரை மோகன் ஜி ஏமாற்றியதாக தயாரிப்பாளர் கோபி தெரிவித்துள்ளார் என ஜூனியர் விகடனின் நியூஸ் கார்டு ஒன்று சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.



உண்மை என்ன ?

பரப்பப்படும் செய்தி கார்டு குறித்து ஜூனியர் விகடனின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், ஜூலை 1-ம் தேதி அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.



ஜூனியர் விகடனின் நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து உள்ளார்கள்.

அதுமட்டுமின்றி, 30 லட்சத்தை ஏமாற்றியதாகப் பரப்பப்படும் செய்தி போலியானது என இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் கோபி ஆகிய இருவரும் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.



Twitter link

முடிவு :

நம் தேடலில், இந்துத்துவாவுக்கு ஆதரவாக படம் எடுக்கிறேன் எனக் கூறி முப்பது லட்சம் வரை மோகன் ஜி என்னிடம் ஏமாற்றியுள்ளார், காவல்துறை தலையிட்டு எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும் என இயக்குனர் மோகன் ஜி மீது ஜெ.எஸ்.கே.கோபி குற்றச்சாட்டு எனப் பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க