YouTurn

கப்பல் கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த ஆடுகளை ஏமன் மக்கள் எடுத்துச் சென்றதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

கப்பல் கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த ஆடுகளை ஏமன் மக்கள் எடுத்துச் சென்றதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஏமன் நாட்டு மீனவர்கள் தத்தளிக்கும் ஆடுகளை கடலிலிருந்து மீட்கும் வகையிலே அந்த ஆடுகளை தங்கள் சிறிய படகுகளின் மூலமாக கரைக்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.

பரவிய செய்தி

ஆஸ்திரேலியாவிலிருந்து சவூதிக்கு ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் ஏமேன் அருகே கடலில் மூழ்கியதால் கடலில் தத்தளித்த ஆடுகளை அள்ளி சென்ற ஏமேன் மக்கள். 


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

ஒரு நிமிட நீளமுள்ள வீடியோவில், ‘கடலில் கவிழ்ந்து கிடக்கும் கப்பலைச் சுற்றி ஆடுகள் மிதந்து கொண்டிருக்கின்றன. சிறிய படகுகளில் வந்த ஆட்களை கடலில் தத்தளிக்கும் ஆடுகளை படகுகளில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்’. இந்த வீடியோவை பதிவிட்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து சவூதிக்கு ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் ஏமன் அருகே கடலில் மூழ்கியதால் கடலில் தத்தளித்த ஆடுகளை ஏமன் மக்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக எடுத்துச் செல்கிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’The Indian EXPRESS’ செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. 


image.png


கடந்த ஏப்ரல் மாதம் வெளியான அந்த செய்தியில், ‘ஆடுகளை ஏற்றிக்கொண்டு ஆப்ரிக்காவில் உள்ள ’ஜிபூட்டி’ என்ற துறைமுக நகரத்திற்கு சென்று கொண்டிருந்த கப்பல் செங்கடலில் மூழ்கியதாகவும், அதில் 160க்கும் மேற்பட்ட ஆடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமிருக்கும் ஆடுகள் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஏமன் நாட்டைச் சேர்ந்த உள்ளூர் மீன்வர்கள் தங்களது படகுகளில் சென்று கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஆடுகளை மீட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.


image.png


மேலும் தேடியதில், ’ALJAZEERA’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியின் படி, ”ஏமன் நாட்டின் லாஜ் என்ற மாகாணத்தில் உள்ள ’ராஸ் அல்-அரா’ என்ற  கடற்கரைக்கு அருகில் இந்த கப்பல் கவிழ்ந்தது எனவும், நூற்றுக்கணக்கான ஆடுகளை அங்கிருந்த ஏமன் மக்கள் மீட்டனர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதிலிருந்து, ஏமன் நாட்டு மீனவர்கள் கடலில் தத்தளித்த ஆடுகளை மீட்கவே அவைகளை படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும், இந்த கப்பல் சவூதிக்கு செல்லவில்லை, ஆப்ரிக்காவில் உள்ள ’ஜிபூட்டி’ என்ற துறைமுக நகரத்திற்கு தான் சென்றுகொண்டிருந்தது என்பதும் தெரியவருகிறது.


முடிவு:


செங்கடலில் மூழ்கிய கப்பலிருந்து தத்தளிக்கும் ஆடுகளை ஏமன் நாட்டு மீனவர்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக எடுத்துச் சென்றதாக தவறாக பரப்பப்படுகிறது. ஏமன் மீனவர்கள் அந்த ஆடுகளை கடலிலிருந்து மீட்கும் வகையிலே தங்கள் சிறிய படகுகளின் மூலமாக கரைக்கு எடுத்து வந்தார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க