YouTurn

ஆக்சிஜன் வாங்குவதற்காக எம்.எஸ் தோனி ரூ.15 கோடி வழங்கியதாக வதந்தி !

ஆக்சிஜன் வாங்குவதற்காக எம்.எஸ் தோனி ரூ.15 கோடி வழங்கியதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

எம்.எஸ்.தோனி 15கோடி நிதி உதவி. சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி இந்த ஆண்டு ஐபிஎல் வருமானத்தை முழுமையாக ஆக்சிஜன் வாங்குவதற்காக வழங்கினார்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நடப்பாண்டு ஐபிஎல் வருமானத்தை ஆக்சிஜன் வாங்குவதற்காக அளிப்பதாகவும், அதற்காக ரூ.15 கோடி நிதி உதவி வழங்கி விட்டதாகவும் கூறி புதிய தலைமுறை செய்தியின் டெம்பிளேட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.



உண்மையில், தோனி 15 கோடி நிதியுதவி அளித்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் புதிய தலைமுறை செய்தியின் டெம்பிளேட் எடிட் செய்யப்பட்டதே,  எடிட் செய்ததில் எழுத்துப் பிழைகள் இருப்பதை காணலாம்.



2020 மார்ச் 28-ம் தேதி வெளியான எகனாமிக் டைம்ஸ் செய்தியில், " எம்.எஸ் தோனி கொரோனா நிதியாக 1 லட்சம் ரூபாய் வழங்கியதாக " வெளியாகி இருக்கிறது. புனேவைச் சேர்ந்த அறக்கட்டளையான முகுல் மாதவ் பவுண்டேசனுக்கு அந்த நிதியை வழங்கி இருக்கிறார். இதன் பிறகு, தோனி வழங்கியது சிறிய தொகை என ட்விட்டர் உள்ளிட்டவையில் நெட்டிசன்கள் பதிவிடத் துவங்கி வைரலாகியது.

தோனி ஆக்சிஜன் வாங்குவதற்காக 15 கோடி வழங்கியதாக இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி எந்தவொரு தகவலும் இல்லை.

இதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் 21 கோடி நிதியுதவி அளித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டில் விராட் கோலியும், அனுஷ்காவும் பிஎம் கேர் நிதிக்கு ரூ.3 கோடி வழங்கியதாகவே செய்தியில் வெளியாகி இருக்கிறது.



ஆர்.சி.பி அணி சார்பில் பெங்களூர் மற்றும் முக்கிய நகரங்களில் ஆக்சிஜன் தொடர்பான தேவைகளுக்கு நிதி உதவி அளிக்க உள்ளதாக விராட் கோலி பேசும் வீடியோ உடன் ஆர்.சி.பி ட்விட்டர் பக்கத்தில் மே 2-ம் தேதி பதிவாகி இருக்கிறது. அதில், எவ்வளவு நிதியுதவி எனக் கூறவில்லை. தற்போது ஐபிஎஸ் போட்டிகளும் நித்தப்பட்டுள்ளன.
முடிவு :


நம் தேடலில், ஆக்சிஜன் வாங்குவதற்காக எம்.எஸ்.தோனி 15 கோடி நிதி அளித்ததாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. அப்படி எந்த தகவலும் இல்லை. இதேபோல், விராட் கோலி 21 கோடி நிதியுதவி செய்ததாகவும் வதந்திகள் பரவுகின்றன என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க