YouTurn

தலித்துகள் சிறிய வீடாக கட்ட வேண்டும் என பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கூறினாரா ?

தலித்துகள் சிறிய வீடாக கட்ட வேண்டும் என பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பிராமணர்கள் வீட்டை விட உயரமாக மற்றவர்கள் வீடு கட்டக்கூடாது. தலித்துகள் அவர்களின் வீட்டை விட சிறிய வீடாக கட்டிக் கொள்ள வேண்டும் - பிராமண சங்க தலைவர் நாராயணன்.



Facebook link 

விரிவான விளக்கம்

மிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் என்பவர் தலித்துகள் சிறிய வீடாக கட்ட வேண்டும், பிராமணர்களின் வீட்டை விட மற்றவர்கள் யாரும் உயரமாக வீடு கட்டக் கூடாது எனக் கூறியதாக தந்திடிவி சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Archive link 



உண்மை என்ன ? 

தமிழ்நாட்டில் பிராமண சங்கத் தலைவர் தலித்துகளின் வீடு எப்படி இருக்க வேண்டும் என இப்படியொரு கருத்தைக் கூறியிருந்தால் கண்டனங்கள் மட்டுமின்றி செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.



வைரல் செய்யப்படும் தந்தி டிவி நியூஸ் கார்டில் பிப்ரவரி 10-ம் தேதி என இடம்பெற்று இருக்கிறது. அதை வைத்து தேடியப் போது தந்திடிவியின் சமூக வலைதள பக்கங்களில் மேற்காணும் நியூஸ் கார்டு இடம்பெறவில்லை. தந்தி டிவி நியூஸ் கார்டில் எடிட் செய்து உள்ளனர் என அறிய முடிகிறது.



எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டில் இடம்பெற்ற தமிழ்நாடு பிராமண சங்கத் தலைவர் நாராயணன் புகைப்படம், சில மாதங்களுக்கு முன்பாக " கலப்பு திருமணம் கூடாது " என அவர் பேசி வைரலான வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் தலித்துகளின் வீடுகள் குறித்து ஏதும் பேசவில்லை.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நாராயணன் அவர்கள் அளித்த பேட்டியின் போது , " தமிழகத்தில் தலித் தலைவர் ஏன் முதல்வர் ஆகவில்லை, தலித் ஒருவரை முதல்வராக்க தயார் " என பேசிய இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், பிராமணர்கள் வீட்டை விட உயரமாக மற்றவர்கள் வீடு கட்டக்கூடாது, தலித்துகள் அவர்களின் வீட்டை விட சிறிய வீடாக கட்டிக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பிராமண சங்க தலைவர் நாராயணன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க