YouTurn

காஸ்மிக் கதிர்கள், நாசா எச்சரிக்கை என பழைய புரளியை தூசி தட்டி பரவல் !

காஸ்மிக் கதிர்கள், நாசா எச்சரிக்கை என பழைய புரளியை தூசி தட்டி பரவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இன்று இரவு செல்போன்கள் பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை. உலக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை. இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதனால் இன்றிரவு 12.30 தொடக்கம் 3.30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள். போன்களை உங்கள் உடம்புக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். அவை பயங்கரமான சேதத்தை உண்டுபண்ணும் எனவும், ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அந்த நேரத்தில் கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் "NASA" செய்தி அறிவித்துள்ளது.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

செவ்வாய் கிரகத்தில் இருந்து காஸ்மிக் கதிர்கள் பூமியை நெருங்குவதால் இன்று இரவு நேரத்தில் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என நாசா எச்சரித்ததாக இப்படியொரு ஃபார்வர்டு வதந்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.



Facebook link 

2017-ம் ஆண்டிலேயே நாசாவை வைத்து பரப்பிய இப்புரளி குறித்து நாம் வீடியோ, மீம் உள்ளிட்ட பதிவுகளை வெளியிட்டு தெளிவுப்படுத்தி இருந்தோம். அதே வதந்தியை கொஞ்சம் தூசி தட்டி, சிங்கப்பூர் செய்தி அறிவித்ததாக மாற்றி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த புரளியில் தேதி மற்றும் ஆண்டு குறிப்பிடாத காரணத்தினால் 10 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றி வருகிறது.

மேலும் படிக்க : அதிகம் செல்போன் பயன்படுத்தினால் கண்ணில் புழு படருமா ?| உண்மை என்ன ?

மேலும் படிக்க : இரவில் செல்போன் பயன்படுத்தினால் கண்ணில் புற்றுநோய் வருமா ?

இரவில் செல்போன்கள் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு வதந்திகள் இன்றளவும் பரப்பப்பட்டு வருகிறது. அது குறித்தும் படிக்கவும்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க