
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
இதைப் பார்த்தவர்கள், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளதாக நினைத்து வருகின்றனர். இதன் உண்மைத்தன்மை குறித்தும் வாசகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். உண்மையில், முகநூல் பதிவில் வைத்த தலைப்பால் குழப்பம் உருவாகி இருக்கிறது.

செய்தியில், " குஜராத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில் மார்ச் 17 இருந்து மார்ச் 31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் " கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவில்லை. குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பதால் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா மீண்டும் பரவுவது தொடர்பாக மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
செய்தியை படிக்க வேண்டும் என்பதற்காக க்ளிக் பைட் வடிவில் முகநூல் பதிவில் இப்படியொரு தலைப்பை வைத்துள்ளனர். இது தவறாக பரவி வருகிறது.