YouTurn

கொரோனா நிவாரண நிதியில் 1 கோடிக்கு புடவை வாங்கியதாக பரப்பப்படும் துர்கா ஸ்டாலினின் பழைய புகைப்படம் !

கொரோனா நிவாரண நிதியில் 1 கோடிக்கு புடவை வாங்கியதாக பரப்பப்படும் துர்கா ஸ்டாலினின் பழைய புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

1 கோடி தங்கஜரிகை புடவை கட்டி கெத்து காட்டிய துர்கா, கொரோனா நிவாரண நிதி கலெக்க்ஷன்.

விரிவான விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ரூ1 கோடி அளவிற்கு தங்க ஜரிகை புடவை கட்டி இருப்பதாகவும், அது கொரோனா நிவாரண நிதி கலெக்சனில் வாங்கியதாகவும் கூறி மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், முகேஷ் அம்பானி, நீதா அம்பானி ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் புகைப்படம் குறித்து தேடிய போது, 2020 டிசம்பரில் மேலூரைச் சேர்ந்த அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் இப்படத்தை ட்விட்டரில் இதே தகவலுடன் பதிவிட்டு இருக்கிறார். 2020ல் திமுக ஆட்சிக்கு கூட வரவில்லை.



Twitter link | Archive link 

மு.க.ஸ்டாலின் குடும்பம் மற்றும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் சந்தித்துக் கொண்ட நிகழ்வு குறித்து தேடுகையில், " முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து தங்களது மகன் ஆகாஷ் திருமணத்திற்கு அழைப்பு விடுத்ததாக " 2019 பிப்ரவரி 12ம் தேதி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.



2019 பிப்ரவரி 11ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.



Twitter link | Archive link 

சீனாவில் இருந்து கொரோனா பரவத் தொடங்கியது 2019 டிசம்பர் மாதம், இந்தியாவில் அதன் தாக்கம் வரத் துவங்கியது 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தான். ஆனால், வைரல் செய்யப்படும் புகைப்படம் எடுக்கப்பட்டது கொரோனா வைரஸ் பாதிப்பு பரவுவதற்கு முன்பாக 2019 பிப்ரவரி 11ம் தேதியே எடுக்கப்பட்டு இருக்கிறது. அப்போது திமுக ஆட்சியிலும் இல்லை, கொரோனாவும் இல்லை.



முடிவு : 

நம் தேடலில், கொரோனா நிவாரண நிதி கலெக்சனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் 1 கோடி தங்கஜரிகை புடவை கட்டி இருப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் ஆனது கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாக 2019 பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க