
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று பார்த்தால் ஷாக்!

OneIndia தமிழ் Link | Archive Link
விரிவான விளக்கம்
அங்கே சென்றால் ஆட்சியாளர்கள் பதவி இழப்பார்கள் என்ற நம்பிக்கை கூட உள்ளது. இப்படிப்பட்ட நிலையத்தில்தான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது." என்று கூறி இரவில் கோவில் கோபுரத்தின் மேல்புறம், வால் நட்சத்திரம் தோன்றியிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இப்பொழுது, வால் நட்சத்திரம் தமிழகத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மேல் நேற்று தோன்றியதாக கூறுகிறார்கள்.!
அப்போ?
தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படுமோ.?
தமிழர்களுக்கு,
நல்லதே நடக்கட்டும்.!
pic.twitter.com/CVRIVt5kLo
— பாரதி கண்ணம்மா,जय श्री राम (@vanamadevi) December 26, 2023
மேலும் இதனை OneIndia தமிழ் மற்றும் NewsTM தமிழ் போன்ற தமிழ் ஊடகங்களும் தங்களுடைய வலைதளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

உண்மை என்ன?
OneIndia தமிழ்மற்றும் NewsTM தமிழ் போன்ற ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து ஒரு புகைப்படம் பதிவு செய்ப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில், இது முதன்முதலில் camerakirukkan என்ற எக்ஸ் பக்கத்தில் கடந்த டிசம்பர் 24 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
அதில், "திருவாரூர் கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம். (Canon 1200D-ல் எடுக்கப்பட்டது) எந்தவொரு கையாளுதலும் இல்லாமல் ஒரே ஷாட்டில் கடினமான எடுக்கப்பட்ட ஷாட் இது. நியோவைஸின் கூடுதல் படங்களை கீழே காண்க" என்று குறிப்பிட்டு மேலும் சில இடங்களில் எடுத்த வால்நட்சத்திரமின் சில புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளதைக் காண முடிந்தது.
Comet Neowise over Thiruvarur temple. (Shot on Canon 1200D)
This was a tough shot to pull off,single exposure without any manipulation. See more pictures of Neowise below pic.twitter.com/7mF8nvHtkq
— camerakirukkan (@camerakirukkan) December 24, 2023
ஆனால் அதே பதிவில், ஒருவர் இந்தப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று கூறி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு இந்தப் புகைப்படத்தை எடுத்த, camerakirukkan என்ற எக்ஸ் கணக்கிலிருந்து, "சரியாக 2020, ஜூலை 22 அன்று எடுக்கப்பட்டது" என்று பதிலளிக்கப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.

மேலும் இது திருவாரூரில் உள்ள கோவில் தானா என்பதை உறுதி செய்ய, திருவாரூர் மாவட்டத்தின் இணையதளப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், இது திருவாரூர் தியாகராஜர் கோவிலின் புகைப்படம் தான் என்பதை உறுதி செய்ய முடிந்தது.

ஆனால் உண்மையில் கடந்த 2020, ஜூலை 22 அன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுரத்திற்கு மேல் வால்நட்சத்திரம் தோன்றியுள்ளதா என்பது குறித்து தேடியதில், அதே தேதியில் உலகின் பல இடங்களிலும் Neowise வால்நட்சத்திரம் ஏற்பட்டதற்கான புகைப்படங்களைக் காண முடிந்தது. ஆனால் பரவி வரும் பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுரத்திற்கு மேல் வால்நட்சத்திரம் ஏற்பட்டுள்ளதாக என்பதற்கு, camerakirukkan என்ற எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புகைப்டத்தைத் தவிர, வேறு எந்த புகைப்படங்களும் கிடைக்கவில்லை.
மேலும் வால் நட்சத்திரம் ஏற்பட்டால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்ற தகவல்களும் தவறாகப் பரவி வருகினறனர். உண்மையில் வால்நட்சத்திரங்கள் அம்மோனியா, மீத்தேன், நீராவி போன்ற உறைந்த வாயுக்களால் ஆன வான் பொருட்கள் மட்டுமே. இவை நட்சத்திரங்கள் கிடையாது. மேலும் இவை நாள் ஒன்றிற்கே பல முறை ஏற்படக்கூடியவை. எனவே வால்நட்சத்திரங்கள் பூமியில் தென்படும் நிகழ்வை, ஆட்சியாளர்களுக்கு ஆகாது என்று கூறி பரப்புவது முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமற்ற தகவல்களே.
முடிவு:
நம் தேடலில், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் தோன்றியதாகப் பரவி வரும் புகைப்படம் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் எடுக்கப்பட்டது என்பதையும், இந்த புகைப்படத்தை எடுத்தவர் இது கடந்த 2020-ல் எடுக்கப்பட்டது என்று கூறி பதிவிட்டுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.