YouTurn

கோவை மாநகராட்சியில் தோற்றவரை வெற்றி பெற்றதாகப் பரப்பும் பாஜகவினர் !

கோவை மாநகராட்சியில் தோற்றவரை வெற்றி பெற்றதாகப் பரப்பும் பாஜகவினர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கோவை மாநகராட்சி 2 வது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி.வத்சலா அபார வெற்றி.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் திருமதி. வத்சலா அபார வெற்றி பெற்றதாக ஓர் பதிவு சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பகிரப்பட்டு வருகிறது .

தமிழக பாஜகவின் சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் பிள்ளையப்பன் இப்பதிவை வெளியிட்டு இருந்தார்.





உண்மை என்ன ?

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில், கோவை மாநகராட்சி வார்டுகளில் பாஜக ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை என இடம்பெற்றுள்ளது. கோவை மாநகராட்சியின் 2-ம் வார்டில் வெற்றிப் பெற்றது திமுக வேட்பாளர் திருமதி அ.புஷ்பமணி என தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

இதுமட்டுமின்றி, கோவை மாவட்டத்தில் பாஜக பெற்ற 1 நகராட்சி மற்றும் 5 பேரூராட்சி வார்டுகளிலும் அந்த பெயர் இடம்பெற்றவில்லை. கோவை மாநகராட்சியின் 2-ம் வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி. வத்சலா 2386 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்து இருக்கிறார்.

Archive link

மேலும் படிக்க : தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டதா ? உள்ளாட்சித் தேர்தலின் உண்மை ரிப்போர்ட் !

முடிவு :

நம் தேடலில், கோவை மாநகராட்சியின் 2-ம் வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி. வத்சலா வெற்றி பெற்றதாக பரவும் தகவல் தவறானது. அவர் பெற்றி பெறவில்லை. அந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார் என அறிய முடிகிறது

ஆதாரங்கள்

https://tnsec.tn.nic.in/
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க