YouTurn

10 நிமிடத்தில் கோவை-திருச்சூர் செல்லும் சுரங்கப்பாதையா ?| உண்மை என்ன ?

10 நிமிடத்தில் கோவை-திருச்சூர் செல்லும் சுரங்கப்பாதையா ?| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

கோயம்புத்தூரில் இருந்து திருச்சூர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. 2 மணி நேர பயணம் இப்போது 10 நிமிடங்கள். இந்திய உள்கட்டமைப்பு மேம்பாட்டு அரசுக்கு நன்றி. இதுபோன்ற நல்ல செய்திகளைப் பற்றி எந்த ஊடக நிறுவனமும் பேசாமல் இருக்கலாம்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இருந்து கேரளாவின் திருச்சூருக்கு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது, இனி 2 மணி நேர பயணம் 10 நிமிடம் என சுரங்கப்பாதையில் வாகனத்தில் செல்லும் போது எடுக்கப்பட்ட 45 நொடிகள் கொண்ட வீடியோவை குஜராத் மாநில பாஜகவின் பொதுச் செயலாளர் ரத்னாகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.



இந்த பதிவிற்கு கீழே பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். மேலும், 2 மணி நேரம் பயணிக்கும் கோவை-திருச்சூர் 110 கி.மீ தொலைவை எப்படி 10 நிமிடத்தில் கடக்க முடியும் என பலரும் கமெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆகையால், இப்பதிவின் இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிட தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?

பாஜகத் தலைவர் பதிவிட்ட சுரங்கப்பாதை குறித்து தேடுகையில், அது கேரளாவின் திருச்சூர்  மாவட்டத்தில் குதிரன் மலையில் உருவாக்கப்பட்ட குதிரன் சுரங்கப்பாதை என அறிய முடிந்தது. சமீபத்தில் தான் இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. இதுதொடர்பாக, இந்திய  சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.



Twitter link | Archive link 

ஜூலை 31-ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " கேரளாவில் உள்ள குதிரன் சுரங்கப்பாதையின் ஒரு பக்கத்தை இன்று திறக்கிறோம். இது மாநிலத்தின் முதல் சுரங்கப்பாதை சாலை. இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கான இணைப்பை மேம்படுத்தும். 1.6 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை பீச்சி-வாசஹானி வனவிலங்கு சரணாலயம் வழியாக வடிவமைக்கட்டுள்ளது " எனக் கூறி இருக்கிறார்.



" திருச்சூர் மாவட்டத்தில் பாலக்காடு - திருச்சூர் சாலையில் குதிரன் என்ற இடத்தில் மலைகளை குடைந்து சுரங்கப் பாதையை அமைக்கும் பணிகள் ஆனது கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. மன்னுத்தி - வடக்கன்சேரி பகுதிகளை இணைக்கும் இப்பகுதி மலைப் பாங்கான பகுதியாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டன.

சாலையின் இடையே குறுக்கிடும் மலையை கடக்க 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இவற்றை தவிர்க்கும் வகையில் மலையை குடைந்து தேசிய நெடுஞ்சாலை சார்பில் சுரங்கப்பாதை சாலை அமைக்க 2016-ல் திட்டமிடப்பட்டது. பாலக்காடு - திருச்சூர் சாலை மற்றும் திருச்சூர்-பாலக்காடு ஆகிய இரண்டு பாதைகளில் இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. இரண்டிலும் சேர்த்து 6 வழிச் சாலையாக 1.6 கி.மீ தூரம் அமைக்கப்படுகிறது. இதனால் இரண்டு நிமிடத்தில் அந்த மலையை கடந்து செல்ல முடியும் " என ஆகஸ்ட் 4-ம் தேதி நியூஸ் 18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.

குதிரன் சுரங்கப்பாதை சாலையின் ஒருபக்கம் மட்டும் தற்போது திறக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது சுரங்கப்பாதை பகுதியும் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை சாலை திறப்பு குறித்து தமிழ், மலையாளம், ஆங்கிலம் என செய்திகள் வெளியாகி இருக்கிறது.



திருச்சூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள குதிரன் சுரங்கப்பாதை சாலை திருச்சூர் மற்றும் பாலக்காடு சாலையில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இச்சாலை மலையை சுற்றி செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும், விபத்தையும் குறைக்கவே உருவாக்கப்பட்டு உள்ளது.

முடிவு :

நம் தேடலில், கோயம்புத்தூரில் இருந்து திருச்சூருக்கு போடப்பட்டதாக கூறப்படும் சுரங்கப்பாதை திருச்சூர்-பாலக்காடு இடையே சமீபத்தில் திறக்கப்பட்ட குதிரன் சுரங்கப்பாதை சாலை. இதன் தொலைவு 1.6கி.மீ. குதிரன் மலையை 3 கி.மீ சுற்றி செல்வதையும் மற்றும் போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்கவும், சில நிமிடங்களில் மலையை கடந்து பயணிக்கவும் இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து திருச்சூருக்கு போடப்பட்ட சுரங்கப்பாதை, 2 மணி நேர பயணத்தை 10 நிமிடத்தில் என குஜராத் பாஜக தலைவர் பதிவிட்டதால் கோயம்புத்தூரில் இருந்து திருச்சூருக்கு எப்படி 10 நிமிடத்தில் செல்ல முடியும் என்ற குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என அறிய முடிகிறது

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க