YouTurn

கோவை அரசு மருத்துவமனையில் எடுத்த புகைப்படமா ?

கோவை அரசு மருத்துவமனையில் எடுத்த புகைப்படமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஊர் சுற்றி பார்க்க நினைத்தால் கோவை GH க்கு போய் பாருங்கள். ஈரக்குலை நடுங்கி விடும் தேவையின்றி வெளியில் திரியாதீர்கள்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழகத்தின் கோவை பகுதியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் செய்திகளும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஊர் சுற்றி பார்க்க நினைத்தால் கோவை GH க்கு போய் பாருங்கள் என சில வீடியோக்களும், இதுபோன்ற புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கை கிடைக்காமல் நெரிசலாக தங்கி சிகிச்சை பெறும் இப்புகைப்படத்தை கோவை அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக பகிர்ந்து வருகிறார்கள். ஏசியாநெட்நியூஸ் இணையதளத்திலும், கோவையில் ஆக்சிஜன், படுக்கைக்கு தட்டுப்பாடு என இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்கள்.



Archive link 



உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் யாரும் மாஸ்க் அணியவில்லை. இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " மேற்கு வங்கத்தின் பர்தமான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை " என 2020 மார்ச் மாதம் 15-ம் தேதி ட்விட்டர் பக்கம் ஒன்றில் பதிவாகி இருக்கிறது.



Twitter link

2019 டிசம்பரில் thedoctorsdialogue எனும் இணையதளத்தில் வெளியான பதிவில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.



மேற்கொண்டு தேடுகையில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த Surjya Kanta Mishra என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிலை என மம்தா அரசை விமர்சித்து இப்புகைப்படத்தை 2019 ஆகஸ்ட் மாதம் பகிர்ந்து இருக்கிறார்.



Twitter link 








கோவையில் நாளொன்றுக்கு 3,000 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் அங்கே பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை மற்றும் ஆக்சிஜன் போன்றவைக்கு தட்டுப்பாடு நீட்டிப்பு என மே 21-ம் தேதி செய்தி வெளியாகி இருக்கிறது.

.

நேற்று கோவை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். கோவையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களை ஆய்வு செய்து இருக்கிறார்.



.





முடிவு :




நம் தேடலில், கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன என்ற செய்தியுடன் மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை தவறாக பரப்பி வருகிறார்கள். தவறான புகைப்படங்களை பகிர வேண்டாம்.















ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க