YouTurn

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குடித்து விட்டு பத்திரிகையாளரை சந்தித்தாரா ?

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குடித்து விட்டு பத்திரிகையாளரை சந்தித்தாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மகாராஷ்ட்ராவின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே .. நிற்க முடியாத அளவு குடித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்திக்க வந்துள்ளார்.

விரிவான விளக்கம்

சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவின் ஆதரவுடன் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பத்திரிகையாளர்களை சந்திக்க வரும் போது நிக்க முடியாத அளவிற்கு குடித்து விட்டு வந்ததாக 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.



Archive link 



வீடியோவில், பேருந்தில் இருந்து இறங்கி வரும் ஏக்நாத் ஷிண்டேவை பத்திரிகையாளர்கள் பலரும் சூழ்ந்து கேள்வி எழுப்புகின்றனர். கூட்டத்தில் அவர் தள்ளப்படுவதும், பேச முயற்சிக்கையில் தள்ளு முள்ளு நிகழ்வதும் நடக்கிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் உள்ள " MH04 Media " எனும் லோகோவை வைத்து தேடுகையில், அந்த முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவு இடம்பெறவில்லை, நீக்கப்பட்டு இருக்கலாம் எனத் தோன்றியது.

மேற்கொண்டு தேடிய போது, ஜூன் 26-ம் தேதி மகாராஷ்டிரா பாஜகவைச் சேர்ந்த ரவிகாந்த் என்பவர்," ஏக்நாத் ஷிண்டே குடித்து விட்டு வந்ததாக இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அது உண்மை இல்லை. இதுவே முழுமையான வீடியோ " என முகநூலில் MH04 Media உடைய ஒரு நிமிட வீடியோவைப் பதிவிட்டு இருக்கிறார்.






Archive link 

இதேபோல் ஜூன் 25-ம் தேதி ட்விட்டர்வாசி ஒருவர் 1.30 நிமிட முழு வீடியோவையும் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், " வைரலான காட்சிக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டே பத்திரிகையாளர்களிடம் தெளிவாய் பேசும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.


ஜூன் 22-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் சூரத் விமான நிலையம் வந்த போது செய்தி நிறுவனங்கள் சூழ்ந்து கொண்ட போது எடுத்த வீடியோவை என்டிடிவி சேனல் வெளியிட்டு இருக்கிறது.



முடிவு : 


நம் தேடலில், மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நிற்க முடியாத அளவு குடித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்திக்க வந்துள்ளார் எனப் பரப்பப்படும் தகவல் தவறானது.


வைரல் செய்யப்படும் வீடியோ அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் சூரத் விமான நிலையத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்டது. வைரல் காட்சிக்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் தெளிவாய் பேசும் முழு வீடியோவையும் நம்மால் பார்க்க முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க