YouTurn

கோழி, ஆட்டு இறைச்சி மூலம் கருப்பு பூஞ்சை பரவுவதாக விஷமப் பதிவு !

கோழி, ஆட்டு இறைச்சி மூலம் கருப்பு பூஞ்சை பரவுவதாக விஷமப் பதிவு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கருப்பு பூஞ்சை நோய் பிராய்லர் கோழி மூலம் பரவுவதால் குறைவு விலையில் விற்றாலும் வாங்காதீர்கள் மக்களே மருத்துவர் ஆலோசனை.

ஆட்டுக்கறி சாப்பிட்டால் கருப்பு பூஞ்சை நோய் மிக விரைவாக தாக்கக்கூடும் மருத்துவர்கள் புதிய கண்டுபிடிப்பு.

விரிவான விளக்கம்

இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறிப்பிடத்தக்க மக்களை தாக்கி உயிரிழப்பும் நிகழ்ந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி மூலமாகவும் கருப்பு பூஞ்சை அதிகம் பரவுவதை மருத்துவர்கள் தெரிவித்து வருவதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க : தமிழகத்தை நெருங்கிய கருப்பு பூஞ்சை.. மருந்து தட்டுப்பாட்டை சமாளிக்குமா தமிழக அரசு ?

கருப்பு பூஞ்சை பாதிப்பானது கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு அதிக அளவில் ஏற்படுவதாக கூறப்பட்டது. ஆனால், கருப்பு பூஞ்சை பாதிப்பு இறைச்சி, வெங்காயம் போன்றவற்றாலும் ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் கட்டுக்கதைகள் உருவாக்கப்படுகின்றன. இறைச்சி மூலம் கருப்பு பூஞ்சை பரவுவதாக எந்த தகவல்களும் இல்லை.



Twitter link 

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ PIB ட்விட்டர் பக்கத்தில், " பண்ணை கோழிகளின் மூலமாக மனிதர்களுக்கு கருப்பு பூஞ்சை பரவுவதாக எந்தவொரு அறிவியல்ரீதியான ஆதாரங்களும் இல்லை " எனப் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : மதுரையில் கொரோனாவா ?| எண்ணெய் பலகாரம், கோழியால் கொரோனா பரவுகிறதா?

கடந்த ஆண்டில், கோவிட்-19 பரவத் துவங்கிய போது கோழி, ஆட்டுக்கறி சாப்பிட்டால் கொரோனா வருவதாக வதந்தியை பரப்பி இருந்தனர்.

இதுபோன்ற பதிவுகள் நையாண்டிக்காக உருவாக்கப்பட்டு இருந்தாலும் கூட பெருவாரியான மக்கள் உண்மை என நினைத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி விடுகிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், பிராய்லர் கோழி மற்றும் ஆட்டு இறைச்சியால் கருப்பு பூஞ்சை வருவதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. இதற்கு முன்பாக கோழிக்கறி, ஆட்டிறைச்சி மூலம் கொரோனா பரவுவதாக வதந்தியை பரப்பி விட்டனர் என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க