YouTurn

பனை மரம் பூத்திருக்கும் அதிசயம் | உண்மை தானா ?

பனை மரம் பூத்திருக்கும் அதிசயம் | உண்மை தானா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

பனை மரத்தை பற்றி பலரும் அறிந்து இருப்போம். ஆனால், பனை மரம் பூக்குமா ? அப்படியா என ஆச்சரியத்துடன் கேட்போம். முசிறியில் பனை மரம் பூத்து இருப்பதாக இப்படமானது முகநூலில் பகிரப்பட்டு இருந்தது. இது உண்மையான எனத் தெரிந்து கொள்ள முயன்றோம். பனை மரம் பூக்குமா என்றால் ? ஆம், பனை மரம் பூக்கச் செய்யும். 80...

பரவிய செய்தி

100 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் பனைமரங்கள் இவ்வாறு பூக்கும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்கள் ஒரு குறிப்பில் கூறியுள்ளார். இடம்-முசிறி



 

விரிவான விளக்கம்

பனை மரத்தை பற்றி பலரும் அறிந்து இருப்போம். ஆனால், பனை மரம் பூக்குமா ?
அப்படியா என ஆச்சரியத்துடன் கேட்போம். முசிறியில் பனை மரம் பூத்து இருப்பதாக இப்படமானது முகநூலில் பகிரப்பட்டு இருந்தது. இது உண்மையான எனத் தெரிந்து கொள்ள முயன்றோம்.



பனை மரம் பூக்குமா என்றால் ? ஆம், பனை மரம் பூக்கச் செய்யும். 80 ஆண்டுகள் கடந்து வாழும் பனை மரத்தில் கிளைகள் வளராமல் காய்ந்து இருக்கும், அதன் உச்சியில் இருந்து பூக்கத் துவங்கும். அவ்வாறு பனை மரம் பூத்த பிறகு மரமானது இறந்து விடும் என்கிறார்கள். இதனை " Century Palm " என்பார்கள்.

இத்தகைய அரிதான நிகழ்வை அனைவரும் பார்த்து இருக்க வாய்ப்பில்லை. அதனை பார்க்கையில், மரத்தின் கிளைகள் முள் முள்ளாய் காட்சி அளிப்பதில் இத்தனை அழகை  பூக்கிறது அதிசயமாய் தான் தோன்றும்.



இதேபோன்று, 2008 ஆம் ஆண்டில் மடகாஸ்கர் பகுதியில் நூற்றாண்டு பனை மரம் பூத்து இருப்பதை கண்டதாக தாவரவியலாளர்கள் கூறியதாக ஓர் இணைய பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். சில தாவரவியல் மாணவர்கள் இதனை கண்டதாக நம்மிடம் தெரிவித்து உள்ளனர்.



இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் பனை மரம் பூப்பதை பற்றி முன்பே குறிப்பிட்டதாக கூறுகின்றனர். பனை மரம் பூக்கும் அரிய நிகழ்வை காண நேர்ந்தால் நிச்சயம் அதன் அழகை ரசியுங்கள்.

பனை நம் மண்ணின் பிரதான வளம் என்றே கூறலாம். பனை மரத்தினை காத்து நம் வளத்தை மேம்படுத்தி இதுபோன்ற பல நூற்றாண்டு பனை மரத்தை எதிர்கால சந்ததியினர் கண்டுகளிக்க வழிவகை செய்வோம்.

UPDATE : 

Gokul Dgk என்ற ஃபாலோயர் பனை பூப்பது தொடர்பாக வெளியிட்ட முகநூல் பதிவில், எல்லா பனைகளும் இதுபோல பூக்காது. இதன் பெயர் தாளிப்பனை எனக் கூறி இருந்தார். இதையடுத்து, கூடுதல் தகவலை இணைக்க முற்பட்டோம்.



ஆம், பனை மரம் பூக்கும் என்பது உண்மை என்றாலும், பனை மரத்தின் ஒரு வகை மட்டுமே இப்படி பூக்கின்றன. " Talipot palm " எனும் பனை மர வகை மட்டும் பூக்கின்றன. அதன் தாவரவியல் பெயர் " Corypha Umbraculifers " . 30 முதல் 80 ஆண்டுகள் ஆகி இருக்கும் " Talipot palm " வகை பனை மரங்கள் பூக்கின்றன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.