YouTurn

பார்வையற்ற தமிழக மாணவிகள் டென்மார்க்கில் சாதனையா ?

பார்வையற்ற தமிழக மாணவிகள் டென்மார்க்கில் சாதனையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மற்றவர்களின் இயலாமையை தவறாக பயன்படுத்தி சில தவறான வதந்திகளை பதிவிடுகின்றனர் . படத்தில் உள்ள மாணவிகள் ஹைதரபாத்தில் மலகபெட் ஊரில் உள்ள GHS பார்வையற்ற மாணவியர் பள்ளியை சேர்ந்தவர்கள் . தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளிக்கு நன்கொடை வழங்கி சேவை செய்த போது எடுக்கப்பட்ட படம்தான் இது . இதை பார்வையற்ற...

பரவிய செய்தி

பார்வையற்ற தமிழக மாணவிகள் டென்மார்க் நாடு வரை சென்று ஓவியம் வரைந்து சாதனை படைத்து உள்ளனர் .

விரிவான விளக்கம்

மற்றவர்களின் இயலாமையை தவறாக பயன்படுத்தி சில தவறான வதந்திகளை பதிவிடுகின்றனர் . படத்தில் உள்ள மாணவிகள் ஹைதரபாத்தில் மலகபெட் ஊரில் உள்ள GHS பார்வையற்ற மாணவியர் பள்ளியை சேர்ந்தவர்கள் .

தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளிக்கு நன்கொடை வழங்கி சேவை செய்த போது எடுக்கப்பட்ட படம்தான் இது . இதை பார்வையற்ற தமிழக மாணவிகள் என்று கூறி தவறான பதிவுகளை வலைதளங்களில் பரப்பியுள்ளனர் .

வலைதளங்களில் தற்பெருமைக்காவும் , விளம்பரத்திற்காகவும் இத்தகைய செயலை செய்துள்ளனர் . தமிழக மாணவிகள் என்றும் , குறிப்பாக பார்வையற்றவர்கள் என்று கூறினால் தானே பதிவு அதிகமாக பேசப்படும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்துள்ளனர் .

பார்வையற்றவர்களை வைத்து எப்படித்தான் இம்மாதிரியான தவறான செய்தியை பரப்ப மனம் வருகிறது என்று தெரியவில்லை .

இவ்வாறு தவறான பதிவுகள் மூலமான விளம்பரங்கள் நம் தமிழ் சமூகத்திற்கு தேவை இல்லை . நமது மாணாக்கர்களும் , இளைஞர்களும் தங்கள் திறமையால் உலகம் முழுவதும் பாராட்டக்கூடிய செயல்களை செய்து வருகின்றன . எனவே தவறான பதிவுக்கு பதிலாக நம் மக்களின் திறமைகளை வெளிக்கொணர உதவுங்கள் .

சுருக்கமாக

தமிழக மாணவிகள் அல்ல ஹைதராபாத் பார்வையற்ற பள்ளியை சேர்ந்த மாணவிகள் ..

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.