YouTurn

பாஜக பிரமுகர் கோயில் நகை 99 சவரனைக் கையாடல் செய்து தப்பி ஓடினாரா ?

பாஜக பிரமுகர் கோயில் நகை 99 சவரனைக் கையாடல் செய்து தப்பி ஓடினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

பரவிய செய்தி

கோயில் நகையுடன் தேசபக்தர் தப்பியோட்டம் 



Archive twitter link 

விரிவான விளக்கம்

பாஜகவைச் சேர்ந்த எஸ்.பி.பட்டு ராமசுந்தரம் என்பவர் வீரமாணிக்கம் கோயில் நகை 99 பவுனுடன் தப்பி ஓடினார். அவர் மீது இந்து சமய அறநிலையத்துறை குரும்பூர் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. 

அதனையடுத்து அவரது முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் அவர் தலைமறைவாகியுள்ளதாகப் போட்டோ கார்டு ஒன்றினை சமூக வலைத்தளங்களில் திமுகவினர் பரப்பி வருகின்றனர். அந்த போட்டோ கார்டில் பட்டு ராமசுந்தரம் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையுடன் இருப்பது போன்ற புகைப்படமும் உள்ளது.



https://twitter.com/Ammanurk/status/1591768092757360640

 

உண்மை என்ன ?

பரப்பக்கூடிய புகைப்படத்தில் இருக்கும் பட்டு ராமசுந்தரம், வீரமாணிக்கம் கோயில் நகை திருட்டு என்ற வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம். இது தொடர்பாக 2021, நவம்பர் 20ம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு, ஒன் இந்தியா போன்றவை செய்தி வெளியிட்டுள்ளது.



News link

அதில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே வீர மாணிக்கம் என்ற கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் வீர பத்ரகாளியம்மன், சந்தி அம்மன், சுடலை மாடன் ஆகிய மூன்று கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் காட்டுப்பாட்டில் இருக்கிறது. 

அக்கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு முன்னதாக  பாஜகவைச் சேர்ந்த பட்டு ராமசுந்தரம் என்பவர் நிர்வகித்து வந்துள்ளார். கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகும், அவர் கோயில் நகைகள் 100 சவரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் இருந்துள்ளார்.



இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரினை அடிப்படையாகக் கொண்டு பட்டு ராமசுந்தரம், அவரது சகோதரர்கள் கார்த்திகேயன், முத்து மற்றும் உறவினர்கள் முருகேசன், திருமால் மற்றும் கதிரேசபாண்டியன் ஆகிய 6 பேர் மீது 7 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், பட்டு ராமசுந்தரம் தலைமறைவாகி தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்தார். அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

https://twitter.com/Mark2Kali_/status/1461392538951028741

Archive twitter link 

இச்சம்பவம் நிகழ்ந்த நாட்களிலேயே திமுகவினர் கோயில் நகையுடன் தேசபக்தர் தப்பியோட்டம்” என்ற தலைப்பில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அப்படங்களையே தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பகிர்ந்து வருகின்றனர்.

முடிவு : 

நம் தேடலில், பாஜகவை சேர்ந்த பட்டு ராமசுந்தரம் என்பவர் கோயில் நகைகளைக் கையாடல் செய்ததாகக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது முன் ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது கடந்த ஆண்டு நிகழ்ந்ததாகும் என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க