YouTurn

ஹைதராபாத்தில் கோவில் அருகே தொழுகை செய்வதை எதிர்த்ததால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைதா ?

ஹைதராபாத்தில் கோவில் அருகே தொழுகை செய்வதை எதிர்த்ததால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் உங்கள் கண்களைத் திறக்கும். தனித்து எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ராஜா சிங் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அதற்கு என்ன காரணம்? ஏனெனில் அம்பர் பேட்டை பகுதியில் உள்ள சிறுபான்மை சமூகத்தினர் கோவிலுக்கு அருகில் உள்ள மெயின் ரோட்டில் மூன்று நாட்களாக தொழுகை நடத்த ஆரம்பித்தனர்.

ஹைதராபாத் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பகுதி. இங்கே மசூதிகள் எல்லா விவரங்களிலும் உள்ளன. இதற்கு இந்து கட்சியான பாஜக எம்எல்ஏ எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​அவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்று பார்த்தீர்களா?

விரிவான விளக்கம்

தெலங்கானா மாநிலத்தின் ஆம்பர் பேட்டை பகுதியில் உள்ள கோவிலின் அருகே அமைந்து இருக்கும் மெயின் ரோட்டில் முஸ்லீம்கள் தொடர்ந்து தொழுகை செய்து வந்ததை பாஜக எம்எல்ஏவான ராஜா சிங் எதிர்ப்பு தெரிவித்த போது போலீசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து செல்வதாக 2.40 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





Twitter link | Archive link 

பிற மொழிகளில் பரவிய வீடியோவின் பதிவு மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு தமிழிலும் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?



பாஜக எம்எல்ஏ  ராஜா சிங் போலீசாரால் கைது செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், 2019 மே 6-ம் தேதி ராஜா சிங் கைது செய்யப்பட்ட வீடியோ மற்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.



2019-ல் ஆம்பர்பேட்டையில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த நிலத்திற்கு வக்ஃப் வாரியம் உரிமை கோரிய நிலையில், ஏற்கனவே சாலை விரிவாக்கப் பணிக்காக அந்த நிலத்திற்கு இழப்பீடாக ஜிஎச்எம்சி ரூ.2.5 கோடியை அளித்து உள்ளதாக ராஜா சிங் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழலால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.



Twitter link | Archive link 

தன்னை ஹைதராபாத் போலீஸ் கைது செய்தது குறித்து ராஜா சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதே வீடியோவை 2019 மே 5-ம் தேதி பதிவிட்டு இருக்கிறார்.

முடிவு :

நம் தேடலில், ஹைதராபாத்தின் ஆம்பர் பேட்டையில் கோவில் அருகே உள்ள மெயின் ரோட்டில் முஸ்லீம்கள் தொழுகை செய்வதை எதிர்த்த காரணத்தினால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைது செய்யப்பட்டதாக வைரலாகும் வீடியோ தவறானது. 2019-ல் ராஜா சிங் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவுடன் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க