YouTurn

பீகாரில் யோகி ஆதித்யநாத்திற்கு கூடிய கூட்டமென பரவும் பழைய புகைப்படம் !

பீகாரில் யோகி ஆதித்யநாத்திற்கு கூடிய கூட்டமென பரவும் பழைய புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கொள்ளை அடிக்கவேண்டும்..மக்களின் பணத்தை அல்ல..மக்களின் மனதை.கோடான கோடி மக்களின் உள்ளத்தை கொள்ளை அடித்த யோகி ஆதித்யநாத்-க்கு கூடிய கூட்டம் இது.அதுவும் பீகாரில்



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

பீகார் மாநிலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கூடிய கூட்டமெனே இப்புகைப்படம் தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ?  

கோவிட்-19 தொற்றின் பாதிப்பு முழுமையாக நீங்காத நிலையில் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாத இறுதியில் பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலையே நடத்த உள்ளனர்.

பீகாரில் யோகி ஆதித்யநாத் பிரச்சார பேரணிக்கு கூடிய கூட்டமென பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அது 2014-ல் கொல்கத்தாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட Jana Chetana Sabha கூட்டமென அறிய முடிந்தது. 2014-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி Truth by IBTL எனும் ட்விட்டர் பக்கத்தில் அப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.



Twitter link | Archive link

அதேபோல் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் தேடலில், " The Kolkata crowd at Modi’s rally(In pictures) " எனும் தலைப்பில் DeshGujarat.com எனும் இணையதளத்தில் வெளியான கொல்கத்தா பிரச்சாரத்தின் புகைப்படத் தொகுப்பில் இப்புகைப்படம் இடம்பெற்று உள்ளது.





முடிவு : 

நம் தேடலில், 2014-ல் கொல்கத்தாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்திற்கு கூடிய மக்களின் புகைப்படத்தை 2020-ல் யோகி ஆதித்யநாத்திற்கு கூடிய கூட்டமென தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க