YouTurn

அத்தி வரதரை ஜூலை 14,15,16-ம் தேதிகளில் மக்கள் காண இயலாது என வதந்தி !

அத்தி வரதரை ஜூலை 14,15,16-ம் தேதிகளில் மக்கள் காண இயலாது என வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீருக்குள் இருந்து அத்தி வரதரின் வைபவம் நடைபெறும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நீருக்குள் இருக்கும் அத்தி வரதரின் சிலை வெளியே கொண்டு வந்து மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவதால் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. அத்தி வரதரை...

பரவிய செய்தி

காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க ஜூலை 14,15,16-ம் தேதிகளில் மக்கள் வர வேண்டாம்...அன்று CM , PM , judges, MP , MLA என VIP மற்றும் VVIP ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது..தயவு செய்து பகிரவும்..வெளியூர் மக்கள் வந்து ஏமாற வேண்டாம். மற்ற நாட்களில் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.

விரிவான விளக்கம்

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீருக்குள் இருந்து அத்தி வரதரின் வைபவம் நடைபெறும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நீருக்குள் இருக்கும் அத்தி வரதரின் சிலை வெளியே கொண்டு வந்து மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவதால் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.



அத்தி வரதரை காண தமிழகம் முழுவதிலும் உள்ள மக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று கொண்டு இருக்கின்றனர். இதற்கிடையில், ஜூலை 14,15,16-ம் தேதிகளில் அத்தி வரதரை காண முதலமைச்சர், பிரதமர், குடியரசுத்தலைவர் உள்பட விஐபிக்களின் வருகை இருப்பதால் மக்கள் செல்ல வேண்டாம் மை அத்தி வரதர் எனும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அந்த ஃபார்வர்டு செய்தி அதிகம் வைரலாகி வருகிறது.



ஆனால், அப்படியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பதே உண்மை. இதுபோன்ற வதந்திகள் வலம் வரும் நிலையில், வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், வதந்திகளை பரப்புவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இன்று ஜூலை 14-ம் தேதி அத்தி வரதரை காண மக்கள் சென்று பார்த்து விட்டும் வருகின்றனர். ஆகையால், மக்கள் வதந்திகளை நம்பி பகிர வேண்டாம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…