YouTurn

ஆந்திராவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.25,000 அறிவிப்பா ?

ஆந்திராவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.25,000 அறிவிப்பா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அசத்தல் முதல்வர்.. ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை தள்ளுபடி செய்ததுடன், குடும்ப அட்டைக்கு 25 ஆயிரம் உதவித் தொகையும் அறிவித்து அசத்தியுள்ளார்.



 

விரிவான விளக்கம்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன், கொரோனா பாதிப்பு காரணமாக  வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை தள்ளுபடி செய்ததுடன், குடும்ப அட்டைக்கு 25 ஆயிரம் உதவித் தொகையையும் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டதாக தமிழக சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.



Facebook link | Archive link 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் ஒவ்வொரு நடவடிக்கைகளை பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் தமிழக சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிரந்து வைரல் செய்வதுண்டு. அதுபோலவே, இந்த செய்தியும் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

ஆந்திராவில் குடும்ப அட்டைக்கு ரூ.25000 வழங்குவது குறித்து தேடுகையில், அந்த மாதிரியான எந்த அறிவிப்பும் வெளியாகியதாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. தமிழிலும் முன்னணி செய்தி ஊடகங்கள் மட்டுமின்றி எந்த இணைய செய்திகளும் கூட இப்படியொரு செய்தியை வெளியிடவில்லை.



கடந்த 2020 ஏப்ரல் மாதம், ஆந்திராவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவதாக வெளியான செய்தி மட்டுமே கிடைத்தது. இதைத் தவிர்த்து, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிதி வழங்கிய செய்திகளே உள்ளன.



" ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதேபோல், கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளதாக " சமீபத்திய செய்திகளில் வெளியாகி இருக்கிறது
முடிவு :

.

நம் தேடலில், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை தள்ளுபடி செய்ததுடன், குடும்ப அட்டைக்கு 25 ஆயிரம் உதவித் தொகையும் அறிவித்து உள்ளதாக பரவும் தகவல் வதந்தியே. அப்படி எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க