YouTurn

'விமானத்தில் ரஷ்ய அதிபர் புதின் பகவத் கீதை படிக்கும் காட்சி' எனப் பரவும் AI புகைப்படம்!

'விமானத்தில் ரஷ்ய அதிபர் புதின் பகவத் கீதை படிக்கும் காட்சி' எனப் பரவும் AI புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ரஷ்ய அதிபர் புதின் விமானத்தில் பகவத்கீதை படிப்பதாகப் பரவி வரும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட அன்பான பரிசான ஸ்ரீமத் பகவத் கீதை நூலை, அதிபர் புதின் வாசித்துக்கொண்டிருக்கும் காட்சி.



Facebook Link | Archive Link

விரிவான விளக்கம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4 அன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். 23வது ஆண்டு இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் வருகை தந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, புதினுக்கு ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட பகவத்கீதை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் பிரதமர் மோடி வழங்கிய பகவத்கீதையை, விமானத்தில் ரஷ்ய அதிபர் புதின் படிக்கும் காட்சி என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 




உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில், இது குறித்த எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. 


எனவே பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழவே, இது குறித்து “Hive Moderation” இணையதளப் பக்கத்தில் ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில், இது 99.9% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது. 



இதே போன்று, “Sight Engine“ இணையதளப் பக்கத்திலும் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்தோம். இங்கும் இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்ற முடிவையே வழங்கியது. 



முடிவு: 


நம் தேடலில்,  பிரதமர் மோடி வழங்கிய பகவத்கீதையை, விமானத்தில் ரஷ்ய அதிபர் புதின் படிக்கும் காட்சி என்று குறிப்பிட்டு பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க