YouTurn

அம்பேத்கரின் அரியப் படம் என்று பரவிய வதந்தி..!

அம்பேத்கரின் அரியப் படம் என்று பரவிய வதந்தி..!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் அரிதான பருவக் காலத்து படங்கள் எனக் கூறி இப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பழைய காலத்து கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை கண்டால் போதும், எது உண்மை ! எது பொய் ? என்று அறியாமல் பலரும் பகிர்ந்து விடுகின்றனர். விலாஸ்ராவ் தேஷ்முக் : இந்திய தேசிய...

பரவிய செய்தி

அண்ணல் அம்பேத்கரின் இளமைப் பருவ அரியப் புகைப்படம்.

விரிவான விளக்கம்

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் அரிதான பருவக் காலத்து படங்கள் எனக் கூறி இப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பழைய காலத்து கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை கண்டால் போதும், எது உண்மை ! எது பொய் ? என்று அறியாமல் பலரும் பகிர்ந்து விடுகின்றனர்.

விலாஸ்ராவ் தேஷ்முக் :

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் 1999 ஆம் ஆண்டில் முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகப்+ பொறுப்பேற்றார். மீண்டும் 2004-ம் ஆண்டில் முதல்வராகினார். இவரது ஆட்சி காலத்தில் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதால், அதற்கு பொறுப்பேற்று தாமாகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர்.



1945-ல் பிறந்த விலாஸ்ராவ் தேஷ்முக் 2012-ம் ஆண்டில் சென்னையில் மரணித்தார். பிரபல அரசியல் தலைவரான விலாஸ்ராவ் தேஷ்முக் உடைய மூன்று மகன்களில் ஒருவரான ரித்தேஸ் தேஷ்முக் திரைப்பட நடிகர் ஆவார்.

விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிராவின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதால் அவருக்கென ரசிகர்கள் பலர் உள்ளனர். அதில், லாத்தூரை சேர்ந்த அஜய் போரதேபாட்டில் என்ற 27 வயது இளைஞர் விலாஸ்ராவின் மிகப்பெரிய ரசிகராவார்.

இவர் விலாஸ்ராவ் தேஷ்முக் பற்றி செய்திதாள்களில் வரும் படங்கள், அவரது அரியப் புகைப்படங்கள், அரசியல் மேடை நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகள் உள்ளிட்ட பலவற்றை அவரின் நினைவாக சேகரிப்பதை 12 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். விலாஸ்ராவ் பற்றி 2 லட்சத்துக்கும் அதிகமான பொருட்களை அஜய் சேகரித்து வைத்துள்ளார். இதில், லாத்தூரில் விலாஸ்ராவ் இறுதியாக பேசியதை அஜயே பதிவு செய்துள்ளார். அதை பொக்கிஷமாக கருதி வருகிறார்.



அஜய் பற்றி அறிந்த விலாஸ்ராவின் மகனான ரித்தேஸ் தேஷ்முக் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும்,விலாஸ்ராவ் 10-ம் வகுப்பு படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், விலாஸ்ராவ் உடன் அவரது மகன்கள் குழந்தைகளாக இருக்கும் புகைப்படத்தையும் ரித்தேஸ் தமக்கு அளித்ததாக அஜய் தெரிவித்துள்ளார்.

அஜய்க்கு வழங்கப்பட்ட விலாஸ்ராவ் படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை கூகுள் செய்து பார்த்தால் அறிய முடிகிறது. ஆக, அம்பேத்கரின் அரிதானப் புகைப்படம் எனக் கருதப்பட்டவை விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்களின் புகைப்படங்களே என்பதையம், வதந்திகள் எவ்வளவு எளிதாக பரவுகின்றன என்பதையம் புரிந்து கொள்ள முடிகிறது.

சுருக்கமாக

அம்பேத்கரின் பருவக் காலத்து அரியப் புகைப்படம் என பரவிய இப்படங்கள் பிரபல அரசியல் தலைவரின் புகைப்படம். அதைப் பற்றி விரிவாக காண்போம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க