YouTurn

முகேஷ் அம்பானி குடும்பம் லண்டனில் குடியேற உள்ளதா ?

முகேஷ் அம்பானி குடும்பம் லண்டனில் குடியேற உள்ளதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனில் சென்று குடியேற உள்ளதாக தகவல் ! பிரிட்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக இருந்த ஸ்டோன் பார்க் பங்களாவை 592 கோடிக்கு அவர் வாங்கியுள்ளார். 2022 ஏப்ரல் மாதம் அங்கு குடும்பத்தினருடன் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனில் குடியேற உள்ளதாக இந்திய அளவில் செய்திகள் வெளியாகின. தமிழில் சன் நியூஸ் சேனல் வெளியிட்ட நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



உண்மை என்ன ? 

முகேஷ் அம்பானி பிரிட்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக இருந்த ஸ்டோக் பார்க் பங்களாவை 592 கோடிக்கு வாங்கி இருக்கிறார். ஆகையால், 2022 ஏப்ரல் மாதம் அங்கு குடும்பத்தினருடன் குடியேற உள்ளதாக பரவிய செய்திக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.



Facebook link | Media Statement

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வெளியிட்ட அறிக்கையில், " அம்பானி குடும்பம் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் வசிக்கும் திட்டம் குறித்து சமீபத்தில் வெளியான செய்திகள் சமூக ஊடகங்களில் தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் குடியேறவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறது.

மேலும், சமீபத்தில் ஸ்டோக் பார்க் தோட்டத்தை கையகப்படுத்திய RIL குழும நிறுவனமான RIIHL, பாரம்பரிய சொத்தை முதன்மையான கோல்ஃப் மற்றும் விளையாட்டு விடுதியாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறது " என விளக்கமாக தெரிவித்து இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், முகேஷ் அம்பானி குடும்பம் அடுத்த வருடம் லண்டனில் குடியேற உள்ளதாக பரவி வரும் செய்தியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மறுத்து உள்ளது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க