யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த மார்ச் 28ஆம் தேதி மியான்மர் நாட்டில் 7.7 அளவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் சென்றுவிட்டது. இந்த நிலநடுக்கம் மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தையையும் பாதித்தது.
இந்நிலையில், கடலில் சூறாவளி போன்று பேரலைகள் எழுந்து, கடலோரத்தில் இருக்கும் கட்டிடங்களை ஒட்டி விழும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, இந்த வீடியோ மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்று பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கடலில் பேரலைகள் எழுந்தது குறித்த செய்திகளை பொருத்தமான keywords கொண்டு இணையத்தில் தேடினோம். ஆனால், இது குறித்த செய்தி ஏதும் கிடைக்கவில்லை. வீடியோவில் இருப்பது போன்று ஒரு நகரத்தை அச்சுறுத்தும் அளவிற்கு பேரலைகள் உண்மையாகவே வந்திருந்தால் உலகம் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கும்.

ஆனால் இது குறித்த செய்திகள் கிடைக்காததால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கண்டறியும் தளத்திளமான ‘Hive Moderation’ல் சோதனை செய்த போது இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவருகிறது.

மேலும், ‘Was it AI’ என்னும் வேறொரு சோதனைத் தளத்தில் ஆராய்ந்தபோது இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது நிரூபணமாகிறது.
முடிவு:
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கடலில் சூறாவளி போன்ற பேரலைகள் எழுந்ததாக காட்சிபடுத்தும் வீடியோ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
