YouTurn

குன்னூரில் ஆம்புலன்ஸ் கதவு திறந்து சாலையில் விழுந்த நோயாளி என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

குன்னூரில் ஆம்புலன்ஸ் கதவு திறந்து சாலையில் விழுந்த நோயாளி என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ ஆகும்.

பரவிய செய்தி

”தமிழ்நாட்டில் உள்ள குன்னூரில் ஆம்புலன்ஸின் கதவு திறந்து, அதிலிருந்த நோயாளி  படுக்கையுடன் சாலையில் விழுந்தார். இது தெரியாமல் ஓட்டுநர் ஆம்புலன்ஸை ஓட்டிச் செல்கிறார்” 


image.png


X Link / Archive Link 


image.png


X Link / Archive Link 


image.png


X Link / Archive Link 

விரிவான விளக்கம்

’ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அதன் பின்புறக் கதவு திறந்துகொள்கிறது. பின்னர், அந்தக் கதவின் வழியே நோயாளி ஒருவர் நகரும் படுக்கையுடன் ஆம்புலன்ஸில் இருந்து கீழே விழுந்துவிடுகிறார். அதைக் கவனிக்காமலே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கிறது’. இந்த வீடியோவை பதிவிட்டு, ஆம்புலன்ஸில் இருந்து நோயாளி கீழே விழுந்த இந்த சம்பவம் தமிழ்நாட்டின் குன்னூரில் நடந்ததாக இந்துத்துவ ஆதரவாளர் உட்பட பலரால் ’இந்தி மொழியில்’ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?


இந்த வீடியோவில் உள்ள ஆம்புலன்ஸ் இந்தியாவில் பொதுவாக செயல்படும் ஆம்புலன்ஸ் வடிவத்தில் இல்லை என்பதை பார்க்கிறோம். இதனால் பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘Nebulo Ivan Velez’ என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 



இந்த பக்கத்தில் காணப்படும் சுயகுறிப்பில் (Bio) செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பகடிகள் செய்யும் வகையில் வீடியோக்கள் உருவாக்குவதில் நாட்டமிருப்பதாக ஸ்பானிஷ் (spanish) மொழியில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்கும் போது செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்று பல வீடியோக்கள் உருவாக்கி பதிவிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 



மேலும் இந்த வீடியோவை, Hive Moderation என்ற தளத்தில் சோதனை செய்த போது, இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்றுதான் என்பது உறுதியாகிறது.


முடிவு:


செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாட்டின் குன்னூரில் நடந்த சம்பவம் என்று தவறாக பரப்பிவருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.