YouTurn

அக்னிபாத் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளச் சொன்னாரா பாஜகவின் நிர்மல் குமார் ?

அக்னிபாத் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளச் சொன்னாரா பாஜகவின் நிர்மல் குமார் ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அக்னிபத் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளுங்கள். மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்க்கும் தேசவிரோதிகளை சுட்டுத் தள்ள வேண்டும். பிரதமர் மோடியின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் உறங்கிக் கொண்டு இருப்பது அசிங்கமாக உள்ளது - நிர்மல் குமார் ( பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு).



Archive link 

விரிவான விளக்கம்

இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ரயில்களுக்கு தீ வைப்பது, பொது சொத்துகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட வன்முறைகளும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அக்னிபாத் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் கூறியதாக கதிர் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Archive link 



உண்மை என்ன ? 

ஜூன் 18-ம் தேதி நிர்மல் குமார் ட்விட்டர் பக்கத்தில், " இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போதும் #அக்னிபத் திட்டத்தை வெளிநாடு கைக்கூலிகளின் அழுத்தம் காரணமாக கலவரத்தை உண்டாக்கும் தேசவிரோத சக்திகளை புறக்கணிப்போம்" எனப் பதிவிட்டு இருக்கிறார்.  



twitter link 

நிர்மல் குமார் குறித்து பரவும் நியூஸ் கார்டு பற்றி கதிர் முகநூல் பக்கத்தில் தேடுகையில், ஜூன் 18-ம் தேதி அப்படி எந்த கார்டும் வெளியாகவில்லை, அது பழைய நியூஸ் கார்டு.



வைரல் செய்யப்படும் செய்தி குறித்து பாஜகவின் நிர்மல் குமாரைத் தொடர்பு கொண்டு கேட்கையில், " இது போலியான செய்தி " எனத் தெரிவித்து இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் தேசவிரோதிகளை சுட்டுத் தள்ள வேண்டும். பிரதமர் மோடியின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் உறங்கிக் கொண்டு இருப்பது அசிங்கமாக உள்ளது என பாஜகவின் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் நிர்மல் குமார் கூறியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க