YouTurn

அதானிக்கு கடன் தருவதாக கூறியதால் பேங்க் ஆப் பரோடா அமீரக கிளையில் பணத்தை எடுக்க மக்கள் குவிந்தனரா ?

அதானிக்கு கடன் தருவதாக கூறியதால் பேங்க் ஆப் பரோடா அமீரக கிளையில் பணத்தை எடுக்க மக்கள் குவிந்தனரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பேங்க் ஆப் பரோடா சி இ ஓ அதானிக்கு கடன் கொடுக்கப் போவதாக ஒரு புரளி கிளம்பியது.. உடனே ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்த வங்கியின் கிளை ஒன்றில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க மக்கள் குவிந்து விட்டார்கள்..!



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ஹிண்டர்பர்க் அறிக்கையின் விளைவால் அதானி குழுமம் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதற்கிடையில், பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் ஏற்றம், இறக்கம் பற்றி கவலையில்லை. கடன் பெறுவதற்கான தகுதியான ஆவணங்கள் மற்றும் விதிமுறைகள் கடைப்பிடிக்கும் பட்சத்தில் அதானிக்கு கடன் வழங்கப்படும் என பேங்க் ஆப் பரோடாவின் தலைவர் சஞ்சீவ் சத்தா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதானிக்கு பேங்க் ஆப் பரோடா கடன் வழங்க உள்ளதாக தகவல் பரவியதால் ஐக்கிய அமீரகத்தில் உள்ள அவ்வங்கியின் கிளையில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க மக்கள் குவிந்து உள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி குறித்து கூகுள் ஸ்ட்ரீட் வியூ(Google Street View)-ல் தேடுகையில், ஐக்கிய அமீரகத்தின் உள்ள அல் ஐன் நகரத்தில் அமைந்துள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் அதற்கு அருகில் உள்ள விஐபி ஜெராக்ஸ் & ஸ்டேஷனரி கடை இருப்பதை பார்க்க முடிந்தது.



பிப்ரவரி 26ம் தேதி பேங்க் ஆப் பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பேங்க் ஆப் பரோடாவின் அல் ஐன் கிளையை மூடுவதாக முடிவு மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதியும் யுஏஐ மத்திய வங்கியிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. 22.03.2023 முதல் அல் ஐன் கிளை மூடப்படுவதாக 20.01.2023 தேதி வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், அல் ஐன் கிளையின் கணக்குகள் அபுதாபி கிளைக்கு மாற்றப்படும். ஆகையால் சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் " என அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.



Twitter link | Archive link

சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தை டாசில் என்பவர் பிப்ரவரி 25ம் தேதி ட்விட்டர் பக்கத்தில், அமீரகத்தில் உள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் தங்களது வங்கி கணக்கை மூடுவதாக பதிவிட்டு இருக்கிறார். அவரின் பதிவிற்கு பிறகே இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.



Twitter link | Archive link 

மேற்கொண்டு பேங்க் ஆப் பரோடா வங்கியின் அல் ஐன் கிளை மூடுவதாக அறிவிப்பு ஏதும் வெளியாகி இருக்கிறதா எனத் தேடுகையில், ஜனவரி 20ம் தேதி பேங்க் ஆப் பரோடாவின் ஐக்கிய அமீரக இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகி இருப்பதை பார்க்க முடிந்தது.



முடிவு : 

நம் தேடலில், பேங்க் ஆப் பரோடா வங்கியின் தலைவர் அதானிக்கு கடன் அளிப்பதாக கூறியதால் ஐக்கிய அமீரகத்தில் உள்ள அவ்வங்கியில் உள்ள கணக்குகளை மூடி டெபாசிட் பணத்தை எடுக்க மக்கள் குவிந்து உள்ளதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது.

அப்புகைப்படம் ஐக்கிய அமீரகத்தின் அல் ஐன் கிளை மூடுவதாக வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கை மூட காத்திருந்த போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க