
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
தமிழகத்துக்கு ஒரு நல்லது உன்னால் நடக்குதுன்னா ,
தமிழ் நடிகர்கள் எல்லோரும் இது போல சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுங்கள்!
உங்க பிரயோசனம் இல்லா பஞ்ச் டயலாக்குகளை கேட்டு ஒரு தலைமுறை வீணாக போவதை தடுக்க முடியும்!@Suriya_offl pic.twitter.com/pa7EYa0koL
— PARANTHAMAN.SRIDARAN 🇮🇳 பரந்தாமன்.ஸ்ரீதரன் (@sparjaga) July 2, 2021
❤புரிந்தவர்கள் பிஸ்தா pic.twitter.com/aAJmV65ZbG
— ANNAPOORANI (@annapoorani_2) July 2, 2021
உண்மை என்ன ?
மாணவர்களின் கல்வி தொடங்கி சமூக சார்ந்த பல கருத்துக்களை நடிகர் சூர்யா தெரிவித்து வருவதால் ஆளும் தரப்பினரால் அரசியல்ரீதியான விமர்சனங்களுக்கும், பலமுறை பொய் செய்திகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா ஜூலை 2-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில், " சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல " எனும் கருத்துடன் ஒளிவரைவு சட்டத் திருத்தம் மீதான கருத்துகளுக்கு இறுதிநாள் குறித்து எடுத்துரைத்து இருந்தார்.
சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல...#cinematographact2021#FreedomOfExpression
Today's the last day, go ahead and file your objections!!https://t.co/DkSripAN0d
— Suriya Sivakumar (@Suriya_offl) July 2, 2021
Twitter link
நடிகர் சூர்யாவின் இக்கருத்து செய்தி நிறுவனங்கள் வரை கவனம் பெற்று வெளியாகி இருக்கின்றன. ஆனால், மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் என நடிகர் சூர்யா எங்கும் குறிப்பிடவில்லை.
Archive link
அப்படி கூறியதாக வைரல் செய்யப்படும் தினமலர் நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று என அறிய முடிந்தது.

ஒளிவரைவு சட்டத் திருத்தம் எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசனும் தன்னுடைய கருத்தினை பதிவு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் கருத்து கூறினால் அதனை கருத்துரீதியாக எதிர்கொள்ளாமல் எடிட் செய்த போலி செய்திகள் மூலமோ அல்லது அவருக்கு எதிரான போலி செய்தியை உருவாக்கியோ விமர்சனம் செய்வது தற்போதைய அரசியல் களத்தில் அதிகமாகவே இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் என நடிகர் சூர்யா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி என அறிய முடிகிறது.