YouTurn

புகைப்படத்தில் இருப்பது நடிகர் செந்தாமரையும் ராஜாத்தி அம்மாளுமா?

புகைப்படத்தில் இருப்பது நடிகர் செந்தாமரையும் ராஜாத்தி அம்மாளுமா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் கருணாநிதி பற்றி பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அதில் ஒரு புகைப்படத்துடன் நடிகர் செந்தாமரை அவரது மனைவி ராஜாத்தி அம்மாள் மகள் கனிமொழி என தவறாக பரப்பப்படுகிறது. கனிமொழியின் பெற்றோர் திரு.மு.கருணாநிதியும் ராஜாத்தி அம்மாளும் தான். உண்மையில் இது செந்தாமரையின்...

பரவிய செய்தி

நடிகர் செந்தாமரை அவரது மனைவி ராஜாத்தி அம்மாள் மகள் கனிமொழி என புகைப்படத்துடன் செய்தி

விரிவான விளக்கம்

தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் கருணாநிதி பற்றி பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அதில் ஒரு புகைப்படத்துடன் நடிகர் செந்தாமரை அவரது மனைவி ராஜாத்தி அம்மாள் மகள் கனிமொழி என தவறாக பரப்பப்படுகிறது. கனிமொழியின் பெற்றோர் திரு.மு.கருணாநிதியும் ராஜாத்தி அம்மாளும் தான்.



உண்மையில் இது செந்தாமரையின் மனைவி  கௌசல்யா செந்தாமரை. இவர் இன்றும் சீரியலில் நடித்து வருகிறார்.  மிகப்பிரபலமான வில்லன் நடிகரான செந்தாமரை அலெக்ஸ் பாண்டியன் , தம்பிக்கு எந்த ஊரு , தூரல் நின்னு போச்சு போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்தவர். இவரது மனைவி கௌசல்யா ஏறக்குறைய 48 வருடங்களாக நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறார்.



சமீபத்தில் ஒரு தனியார் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து இந்த செய்தியை இணைத்து பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் . இருவரும் சேர்ந்து நாடகம் நடித்துகொண்டிருக்கும் போது 54 வருடத்திற்கு முன்னரே திருமணம் செய்து கொண்டனர். நடிகர் செந்தாமரை இறந்து 25 வருடங்கள்  ஆகி விட்டது இப்போது தனியாக வசித்து வருகிறார்.



யாராக இருந்தாலும் ஒருவரின் குடும்பத்தை பற்றி வீண் வதந்தி பரப்புவது நாகரீகமில்லை.

சுருக்கமாக

புகைப்படத்தில் இருப்பது செந்தாமரையின் மனைவி கௌசல்யா . அவரும் ஒரு நடிகை .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.