YouTurn

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் முஸ்லிம் குழந்தைகள் எனப் பரவும் பாகிஸ்தான் வீடியோ!

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் முஸ்லிம் குழந்தைகள் எனப் பரவும் பாகிஸ்தான் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் முஸ்லிம் குழந்தைகள் எனக் கூறி 40 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

நமது நாட்டில் வயது வித்தியாசம் இல்லாமல் பல பயங்கரவாதிகள் உள்ளனர்..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் ஜிகாதிகள் எனக் கூறி 40 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

பரவி வரும் பதிவுகளில், ரயில் தண்டவாளத்தின் அருகில் உள்ள அனைத்து முஸ்லிம் குடிசைவாசிகளையும் அகற்றுங்கள், இல்லையெனில் இந்த ஜிஹாதிகள் ஒரு நாள் பெரிய குற்றங்களை செய்வார்கள் என்று குறிப்பிட்டு, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவைக் குறிப்பிட்டு சமூக ஊடகப் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.  

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை “Google Reverse Image Search” மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 

The Karachi Exposer” ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள ‘Boat Basin Chowk’ பகுதியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு கடந்த 2023 டிசம்பர் 06 அன்று பதிவிடப்பட்டிருந்தது. 


இதே போன்று, “Momentique News” ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும், பரவி வரும் இதே வீடியோ “சர் தாஜ் கான், பஹட்க் போட் பேசின் செளக் (Sir Taj Khan, Pahatk Boat Basin Chowk) அருகே, ரயில் தண்டவாளத்தின் பொருட்கள் நிறைய திருடப்படுகின்றன. PS போட் பேசின் (PS Boat Basin) இதற்கு தகுந்த  நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது” என்று குறிப்பிட்டு கடந்த 2023 டிசம்பர் 06 அன்று பதிவிடப்பட்டிருந்தது.


மேலும் இது குறித்து பாகிஸ்தான் காவல்துறையினர், “Media Cell - DIG South Zone” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குழந்தைகளை பெசன் காவல் நிலைய பொறுப்பாளர் எச்சரித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்ப்டைத்தார் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.


இதன் மூலம் பரவி வரும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, பாகிஸ்தானில் அமைந்துள்ள கராச்சியில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

முடிவு:

நம் தேடலில்,  இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் முஸ்லிம் குழந்தைகள் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க