YouTurn

தமிழ்நாட்டில் காவலர் தாக்கப்படும் காட்சி எனப் பரவும் ஆந்திரப்பிரதேச வீடியோ!

தமிழ்நாட்டில் காவலர் தாக்கப்படும் காட்சி எனப் பரவும் ஆந்திரப்பிரதேச வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆந்திர பிரதேசம், கூடூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் சாமி தாஸ் என்பவரை மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கலிந்தா என்பவர் தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

என்னடா தமிழ்நாட்டுல காவலர்களுக்கே இதான் நிலைமையாடா... அப்போ சாதாரண மக்களின் நிலை....???

Facebook Link:

விரிவான விளக்கம்

"தமிழ்நாட்டில் காவலர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?" என்று கூறி 32 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பாஜகவினர் உட்பட பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காணமுடிகிறது. 

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், "World of India" என்ற எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ, "திருப்பதி மாவட்டம் கூடூர் சாதுபேட்டா மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ஒருவர், பின்னால் இருந்து தடியால் தாக்கப்பட்ட சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது" என்று குறிப்பிட்டு ஜூலை 19 அன்று பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. 

எனவே இதுகுறித்து மேலும் தேடியதில், "வீடியோ: குடிபோதையில் ஆந்திர போலீஸ்காரரை மரக்கிளையால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்" என்று குறிப்பிட்டு 'India Today' பக்கத்தில் ஜூலை 20ஆம் தேதி அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதில் "ஆந்திராவில் ஒருவர் மரக்கிளையால் காவலர்மீது தாக்குதல் நடத்தினார். குற்றம்சாட்டப்பட்டவர் குடிபோதையில் இருந்தபோது, ​​திருப்பதி மாவட்டம் கூடூர் நகரில் காவலரைத் தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் காயம் அடைந்தவர் சாமிதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவலர் தலையில் பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், இது ஆந்திர பிரதேசம், கூடூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் சாமிதாஸ் என்பவரை மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கலிந்தா என்பவர் தாக்கிய வீடியோ என்பதையும், காவலரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதையும் மற்ற ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் உறுதி செய்யமுடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், தமிழ்நாட்டில் காவலர் ஒருவர் தாக்கப்படும் காட்சி எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க