யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சிறுபான்மையினர்களின் வழிபாட்டு தளங்கள் தாக்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
பங்களாதேஷில் மைனாரிட்டி வழிபாட்டு தளங்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது..
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் மாணவ அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய போராட்டங்கள், மிகப்பெரிய வன்முறைகளாக அங்கு வெடித்தன. இதனையடுத்து வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு சிறுபான்மையினர்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை வலதுசாரிகள் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.
Hindu temples, Hindu people and Hindu business establishments are not safe in Bangladesh. Coming times may be more difficult for Bangladeshi Hindus. We have to seriously work on it.#SaveBangladeshiHindus pic.twitter.com/olo9EOz48M
— Baba Banaras™ (@RealBababanaras) August 13, 2024
मोहम्मद सिद्दीकी नाम के एक जिहादी ने ढाका के दोहर उपजिला में जयपारा दुर्गा मंदिर पर हमला किया। मंदिर पर हमले के बाद मदरसा चरमपंथी ने सभी हिंदुओं को मारने की धमकी दी#SaveBangladeshiHindus#SaveHinduTemples pic.twitter.com/ooGbLzw81U
— सत्य सनातन भारत (Modi ka parivar)🚩🙏🕉️🙏🕉 (@NirdoshSha33274) August 14, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறியமுடிந்தது.
"ब्रेकिंग न्यूज"
— Harsh Vyas 🇮🇳 ( मोदी सरकार - 3.0 ) (@Harsh2147) June 23, 2023
बांग्लादेश : मोहम्मद सिद्दीकी नाम के एक मुस्लिम जिहादी ने ढाका के दोहर उपजिला में जयपारा दुर्गा मंदिर पर हमला किया।
मंदिर पर हमले के बाद मदरसा चरमपंथी ने सभी हिंदुओं को मारने की भी धमकी दी। pic.twitter.com/1ZXIzU5siE
மேலும் ‘Asad Noor’ என்ற யூடியூப் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ கடந்த 2023 ஜூன் 23 அன்றே “முல்லா-முன்ஷியும் அரசும் ஒன்று சேர்ந்தது! என்று குறிப்பிட்டு வீடியோவாக வெளியிடப்பட்டிருந்தது. மேலும் வீடியோவில், சித்திக் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர்தான் சிலைகளை சேதப்படுத்தினார் என்று கூறப்படுகிறது. பின்பு அங்கு வந்த உள்ளூர் மக்கள் அவரைப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்றும் அதில் கூறப்படுவதைக் காணமுடிகிறது.

எனவே, இது தற்போது நடைபெற்ற வங்கதேச கலவரத்தோடு தொடர்புடைய வீடியோ அல்ல என்பதை உறுதி செய்யமுடிகிறது. பரவி வரும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இதன் உண்மைத்தன்மையை அறியாமல் வலதுசாரிகள் பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், வங்கதேச கலவரத்தில் சிறுபான்மையினர்களின் கோயில்கள் தாக்கப்படுவதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், பரவி வரும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது.
