YouTurn

குலசை கடற்கரையில் ஏற்பட்ட புயல் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

குலசை கடற்கரையில் ஏற்பட்ட புயல் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது 2022 நவம்பர் மாதம் சைப்ரஸ் (Cyprus) நாட்டில் உள்ள அய்யா நாபா (Ayia Napa) கடற்கரையில் ஏற்பட்ட ‘Tornadic Waterspout’ ஆகும்.

பரவிய செய்தி

குலசை கடற்கரையில் ஏற்பட்ட புயல் 13/12/3024 


 Insta Link



விரிவான விளக்கம்

கடற்கரையோரம் கடல்நீரில் சூறாவளி சுழன்றட்டிப்பதை சில நொடிகள் காட்சிபடுத்தும் வீடியோவை பதிவிட்டு, இது குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ஏற்பட்டதாக சமூக வலைதளமான இஸ்டாகிராமில் பரப்பப்படுகிறது.


https://www.instagram.com/p/DDhiMMAS61Q/

உண்மை என்ன:


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘The Weather Channel’ என்ற வலைதளத்தில் இதன் முழு வீடியோவைக் காணமுடிந்தது. ‘The Weather Channel’ 2022 நவம்பர் 8ஆம் தேதி வெளியிடபட்டுள்ளது செய்தியின்படி, 2022 அக்டோபர் 17ஆம் தேதியன்று, சைப்ரஸ் (Cyprus) நாட்டில் உள்ள அய்யா நாபா (Ayia Napa) கடற்கரையில் ‘Tornadic Waterspout’ ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.  



Waterspouts என்பது சுறாவளி போன்றதாகும். நிலத்தில் ஏற்படும் சூறாவளி (Tornado) என்பது குழல்(Funnel) போல் காட்சியளிக்கும் வலுவான காற்றுச் சுழற்சியாகும். வழக்கமாக காற்று நம் கண்களுக்கு தெரியாது. ஆனால், இந்த காற்றுச் சுழற்சியில் நீர் துளிகள், தூசிகள், பிற சிறிய கசடுகளும் இருப்பதால்தான் சூறாவளி நமது கண்களுக்கு தெரிகிறது. இது வழக்கமாக ’நிலத்திலிருந்து மேகக்கூட்டம் வரை’ நீண்டதாக இருக்கும். 


இதேபோல், Waterspouts என்பது நீரில் ஏற்படும் சூறாவளியாகும். இதில் Fair Weather waterspouts மற்றும் Tornadic waterspouts என இரண்டும் வகைகள் உண்டு. இதில் நாம் வீடியோவில் பார்ப்பது, Tornadic waterspout ஆகும். இது நீரிலே உருவாகக்கூடிய காற்றுச் சுழற்சியாக இருக்கலாம் அல்லது நிலத்தில் உருவான காற்றுச் சுழற்சி நீரை நோக்கி நகர்ந்ததாக இருக்கலாம். இந்த Tornadic waterspout  பெரும்பாலும் அது ஏற்படும் பகுதிக்கு இடியுடன் கூடிய மழையை கொண்டுவருவதாகவே இருக்கும். 


அய்யா நாபா கடற்கரையில் ஏற்பட்ட ‘Tornadic Waterspout’  பெரிதாக சேதத்தை விளைவிக்கவில்லை என்றும் இதனால் யாரும் காயமடையவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். 


மேற்கூறிய விவரங்களில் இருந்து வீடியோவில் காணப்படுவது புயல் (Cyclone) அல்ல. அது சைப்ரஸ் (Cyprus) நாட்டில் உள்ள அய்யா நாபா கடற்கரையில் ஏற்பட்ட ‘Tornadic Waterspout’ என்ற நீர்வழிச் சூறாவளியாகும். இதனை தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள குலசை (என்னும்) குலசேகன்பட்டினத்தின் கடற்கரையில் ஏற்பட்ட புயல் என்று தவறாக பரப்புகின்றனர். மேலும், 13/12/3024 என்று அன்றைய தேதியும் தவறாக எழுதப்பட்டுள்ளது.


முடிவு: 


2022  அக்டோபர் மாதம், சைப்ரஸ் (Cyprus) நாட்டில் உள்ள அய்யா நாபா (Ayia Napa) கடற்கரையில் ‘Tornadic Waterspout’ ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இதனை குலசை கடற்கரையில் ஏற்பட்ட புயல் என்று தவறாக பரப்புகின்றனர். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.