YouTurn

பழைய மகாபலிபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்! உண்மை என்ன?

பழைய மகாபலிபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI Technology) உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

சென்னை அடையார் பகுதியில் பழைய மகாபலிபுரம் சாலையில் தேங்கி நிற்கும் வாகனங்கள். திமுகவிற்கு ஓட்டு போட்ட சென்னை மக்களுக்கு வாழ்த்துக்கள்#ChennaiRain #CycloneFengal


image.png


X Link

விரிவான விளக்கம்

மழையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, ’இந்த போக்குவரத்து நெரிசல் பழைய மகாபலிபுரம் சாலையில் ஏற்பட்டதென்றும் இது திமுக ஆட்சியின் அவலம் என்றும்’ ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது. சமூக வலைதளங்களில் மட்டுமின்றி ‘Business Line’, ’OneIndia’ ஆகிய செய்தித்தளங்கள் வெளியிட்டுள்ள செய்திகளிலும் கூட இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.



உண்மை என்ன:


பரப்பப்படும் இந்த புகைப்படத்தில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு விபத்திற்குள்ளானது போல் தெரிந்தது. இதிலிருந்து, முதல்பார்வைக்கே இந்தப் புகைப்படம் Edit செய்யப்பட்டது போல் காட்சியளிக்கிறது. இருப்பினும், இந்த புகைப்படத்தை ’Hive Moderation’ என்னும் தளத்தில் சோதித்தபோது, இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI Technology) உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.



மேலும் உறுதி செய்துகொள்வதற்காக இந்த புகைப்படத்தை True Media என்னும் தளத்தில் சோதித்தபோது, இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது  நிரூபணமானது.



இதிலிருந்து, பரப்பப்படும் புகைப்படம் உண்மையானது அல்ல. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இந்த படத்தின் உண்மைத்தன்மையை அறியாமலே இதை செய்தி நிறுவனங்களும் தங்களது செய்திகளில் பயன்படுத்தியுள்ளனர்.


முடிவு:


செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, பழைய மகாபலிபுரம் சாலையில் மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் என்று பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.